அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

காவலரணை அகற்ற ஆர்ப்பாட்டம்


மட்டக்களப்பு புதுநகரில் நடமாடிய மர்ம மனிதர்களை அப்பகுதி பொது மக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் சேத்துக்குடா காவலரணுக்குள் புகுந்ததாகத் தெரிவித்து புதூர் விமான நிலையத்துக்கு அருகில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மர்மமனிதர்களாக நடமாடி மக்களை அச்சுறுத்தி வருபவர்கள் இராணுவத்தினரும், காவல்துறையினருமே என குற்றம் சாட்டியதுடன் இவர்களின் முகாம்களை உடனடியாக அகற்றி தங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தற்போது மாணவர்களுக்கான உயர்தரப்பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்த முடியாத அளவுக்கு இந்த மர்ம மனிதர் பிரச்சினை பாரிய சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரிய அளவில் உளரீதியான பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். தாம் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அச்சம் அடைந்திருப்பதாக அங்கு கூடியிருந்த பெண்கள் தெரிவித்தனர். தங்களது கிராமங்களுக்குள்  நுழையும், மர்ம மனிதர்கள் விமான நிலையம்,  மற்றும் சேத்துக்குடா காவலரண் போன்ற பகுதிகளுக்குள்ளே தப்பிச் செல்வதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊரின் மத்தியில் அமைந்துள்ள சேத்துக்குடா பொலிஸ் காவல் அரணை உடனடியாக அகற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வீதிகளில் ரயர்களை எரித்து வீதித்தடையை ஏற்படுத்தினர், இதனால் மட்டக்களப்பு நகருக்கும் படுவான்கரைக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இன்று காலையில் மட்டக்களப்பு நகரிலிருந்து படுவான்கரைக்கு சென்ற அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தால் தமது பயணத்தை தொடரமுடியாது திரும்பி வந்தனர். படுவான்கரையிலிருந்து வந்த மக்களுக்கும் மட்டக்களப்பு நகருக்குள் நுழைய முடியாத நிலையில் தமது ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.


பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அறிந்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், மண்முனைப்பற்று  பிரதேச சபைத் தவிசாளர்  சசிதரன் கிரிஸ்ரினா, வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் கே.விமலநாதன், மாநகர சபை உறுப்பினர் கிருபைராஜா உட்பட பலரும் அங்கு வந்து மக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites