அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

காரைதீவு மர்ம மனிதன் தாக்குதல்


மட்டக்களப்பு காரைதீவு பிரதேசத்தில் மர்ம மனிதர் ஒருவருடன் குடும்பஸ்தர் ஒருவர் நேரடியாக மோதலில் ஈடுபட்டவேளை மர்மனிதனின் வெட்டுக்கீறல் காயங்களுடன் அதே இடத்தைச் சோ்ந்த 54 வயதுடைய விநாயகமூர்த்தி இராசலிங்கம் என்பவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.


இதன்போது மர்மமனிதர் அவரது வீட்டு வெளிமதில் சுவரோடு சாய்ந்து ஒளித்திருந்துள்ளார். தாக்குதலுக்குள்ளானர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளார். அவரை கடந்த 5 தினங்களாக இரவில் கண்விழித்து ஊர்ப்பாதுகாப்பில் ஈடுபட்டுவரும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு காரைதீவுப் பிரதேசசபைக்கு தெரிவான உறுப்பினர் யோ.கோபிகாந் சென்று பார்வையிட்டு நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார்.

திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவிலேயே இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
இந்நபர் டோர்ச் லைட் உதவியுடன் கடைக்குச் செல்லும் வழியில் வீதியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மதிலருகில் நின்று கொண்டிருந்தார். அவரை நீ யார் என கேட்டபோது, அச் சந்தேக நபர் பதில் எதனையும் கூறாது கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.


இச்சம்பவத்தினால் வெட்டுக்கீறல் காயங்களுக்கு உள்ளான குடும்பஸ்தர் கூச்சல் இடவே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அத்துடன் காரைதீவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர் யோ.கோபிகாந், மனித உரிமை செயற்பாட்டாளர் பி. ஸ்ரீகாந் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்து வந்ததுடன் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த பிரஸ்தாப நபரை காரைதீவு வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று அனுமதித்தனர். இச்சம்பவத்தைக் கேள்வியுற்றதும் கம்பு, தடிகளுடன் ஊர்மக்கள் திரண்டனர். சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியும் ஸ்தலத்திற்கு விரைந்தார்.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites