கிறிஸ் பூதங்கள் அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என வாந்தி பரப்பியதாகக் கூறப்படும் நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் இன்று பிறப்பித்தார்.
இவ்வாறு தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர் பிரியந்த நிரோஷன பொன்சேகா எனும் முச்சக்கர வண்டி ஓட்டுனராவார். சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் இவ்வாறு உண்மையற்ற தகவல்கைளை பரப்பியது தொடர்பில் ஒலிப்பதிவு ஒன்று தம்மிடம் இருப்பதாக பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்தனர்.
எப்படியிருப்பினும் குறித்த கிறிஸ் பூதங்கள் தொடர்பான சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை பொலிஸார் பறித்துள்ளனர் என சந்தேக நபர் தொடர்பில் வழக்காடும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.





1 comments:
உண்மையெல்லாம் பேசக்கூடாது!!!
கருத்துரையிடுக