தம்புள்ள சிகிரியா பிரதேச மக்களை கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அச்சுறுத்தி வந்த மர்ம மனிதன், பெண்கள் அணியும் பல்வேறு விதமான உள்ளாடைகள் நிரம்பிய பொதியுடன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் சீகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வஜிர அத்தபத்து தெரிவித்தார்.
பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் சிகிரியாவை அண்டியுள்ள "பிதுரங்கள்" காட்டினுள் மரங்களிடையே ஒளிந்திருந்த போது சனிக்கிழமை இரவு7.30 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டார். இம் மர்ம மனிதன் கைகளுக்கு வளையல்களும் விரல்களுக்கு மோதிரங்களும் அணிந்து முகத்தைக் கறுப்புத் துணியால் மறைத்திருந்ததாக சிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் போது குறித்த சந்தேகநபர் தன்னை சேர்.ஜோன் கொத்தலாவல என்றும், யுத்தகாலத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளான். குறித்த சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிப்பதாவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொலநறுவைப் பகுதியைச் சேர்ந்த இவரது வயது 34 எனவும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





0 comments:
கருத்துரையிடுக