எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.எல். மன்சூர்
கடந்த சில வாரங்களாக மர்ம மனிதன் சர்ச்சையைத் தொடர்ந்து வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்வச்சம் ஓரளவுக்கு நீங்கியதையடுத்து மக்கள் பிரதான வீதியிலும் மற்றும் உள்ளுர் கடைகளிலும் புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நோன்பு காலம் முடிவுறும் நிலையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இரவு காலங்களில் மக்கள் உடுப்புக்களை வாங்குவதில் இரவு 12.00 மணிவரையும் புடவைக் கடைகளில் மக்களைக் காணக்கூடியதாக இருந்தது. அப்பாடா பயப்பீதி மட்டும் ஓய்ந்து விட்டதே என்கிற கவலையின்றி மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்கள் இராக்காலம் பகற்காலங்கள்போல் தோற்றமளிப்பதையும் தற்போது காணக்கூடியதாக இருக்கிறது.
இதேவேளையில் வெளியூர் அங்காடி வியாபாரிகள் மர்ம மனிதன் தொடர்பான பிரச்சினையால் இப்பகுதிக்கு வியாபாரத்திற்காக வருகைதர பயந்திருந்தவர்களும் தற்போது தமது வியாபாரத்தை மேற்கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது.







0 comments:
கருத்துரையிடுக