கொழும்பு, புதுக்கடை பகுதிக்குள் மர்மமனிதர்கள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பும் பதற்றமும் எற்பட்டது. மர்மமனிதர்கள் இருவரை தாம் கண்டதாக சிலர் தெரிவித்ததையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் வெளியானதையடுத்து புதுக்கடை பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் மர்ம மனிதர்களை பிடிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
பொல்லுகள், தடிகள், கற்களை ஏந்தியவாறு மக்கள் மர்ம மனிதர்களை தேடினர். இவ்விடயம் குறித்து பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து படையினரும் பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர். ஆனாலும் எவரும் கைதுசெய்யப்படவில்லை. நேற்று அதிகாலை 2மணியளவில் மர்மமனிதர்கள் இருவரை கண்டதாகவும் இவர்கள் வீடுகளின் கூரை மீது ஏறி தப்பியோடியதாகவும், புதுக்கடை வாசியொருவர் தெரிவித்துள்ளார். கறுப்பு நிற காற்சடைடையும் அதேநிறத்திலான ரீசேட்டும் அணிந்திருந்த இருவரே இவ்வாறு புதுக்கடை பகுதிக்குள் ஊடுருவியதாக நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் கொழும்பிலும் சில பகுதிகளில் மர்ம மனிதர்களின் ஊடுருவல்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. ஆனாலும் இத்தகைய மர்ம மனிதர்கள் எவரும் இல்லையெனவும் இவை வெறும் கட்டுக்கதை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





0 comments:
கருத்துரையிடுக