முதன்முதலாக அமையவுள்ள இலங்கையின் தொழில்நுட்ப பூங்காவனம் அம்பாந்தோட்டையில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அமையப் பெருகின்ற பாரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்குள் இரண்டு பல்கலைக்கழங்களில் சுமார் 5000 மாணவர்கள் கல்வி பயில்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படவிருக்கின்றது. சிங்கப்பூர், மற்றும் இந்திய நிறுவனங்களின் ஒத்துழைப்பும், இ.ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும் என்று இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ அவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்தப் பூங்கா அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்பூங்காவில் தகவல் தொழில்நுட்ப வணிக செயற்பாடுகளை வெளியகப்படுத்துதல் தொழில்களை இலகுவாகக் கொண்ட சில நிறுவனங்களும் இங்கு அமைக்கப்படுவதுடன், கணினிகளின் பாகங்களைக் கொண்டு புதிய கணினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றும் அமையப்பொறுவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான திட்டங்கள் எதிர்காலத்தில் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் அமையுமாக இருந்தால் யுத்தத்தால் நிலைகுலைந்போன இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் வெளியுலகத்தினை சரியான புரிந்துணர்வோடு நடந்து எதிர்கால புத்திஜீவிகளாக உருமாற்றம் பெற உதவும் அல்லவா?





0 comments:
கருத்துரையிடுக