எஸ்.எம்.எம்.றம்ஸான்
நீண்டகால காலமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து வந்த மக்களின் தற்போது நிறைவேறியுள்ளது. மேற்படி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை நோயாளிகளைப் பார்வையிட வெளி இடங்களில் இருந்து வருவோர் தங்குவதற்கு அல்லது உரியநேரம் வரும்வரை காத்திருப்பதற்கு ஓர் இடம் இல்லாமல் மக்கள் பாரிய சிரமங்களை இவ்வளவு காலமாகவும் எதிர் நோக்கி வந்தனர்.
அதனை ஓரளவுக்கு நிறைவேற்றும் நோக்கோடு இன்று மாலை பெண் பார்வையாளர்களுக்கு மட்டும் ஏற்றவாறு மக்கள் தரிப்பிடம் ஒன்றை வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் ஏற்பாட்டில் புணரமைக்கப்பட்ட மக்கள் தரிப்பிடத்தை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம்.நஸீர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட ஊழியர்களும் கலந்து கொண்டனர்.







0 comments:
கருத்துரையிடுக