இலங்கையில் பரவலாக பேசப்படும் விடயங்களில் ஒன்றான கிரிஸ் பூதங்கள் கிராமப் புறத்தையே அதிகமாக இலக்கு வைத்து தாக்குகின்றது. பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் ‘கிறீஸ் பூதங்களுக்கு வைத்திய சிகிச்சையளிக்க வேண்டாமென வைத்தியர்களை பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
‘மர்ம மனிதர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டாமென்று பொதுமக்கள் வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ள பல சம்பவங்கள் குறித்து எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’ என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அக்ககரைப்பற்று வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வாகனமொன்று கிறீஸ் மனிதர் ஒருவரை ஏற்றிச்செல்வதாக கூறி ஒரு குழுவினர் அவ்வாகனத்தை தாக்கியதாகதாகவும் டாக்டர் குணசேகர கூறினார்.





0 comments:
கருத்துரையிடுக