வெள்ளி, 21 அக்டோபர், 2011
வியாழன், 20 அக்டோபர், 2011
லிபிய ஜனாதிபதி கடாபி கொல்லப்பட்டார்? (படம் இணைப்பு)
லிபியா நாட்டின் ஜனாதிபதி கேர்ணல் கடாபி காயமடைந்த நிலையில் தற்போது உயிரிழந்தள்ளதாக அந்நாட்டின் இடைக்கால கவுன்சிலர் தெரிவி்த்துள்ளார். இன்னுமொரு தகவலின்படி காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தத் தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையிலேயே கடாபி இரத்தக் கறையுடன் கூடிய இப்படம் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
100 பவுண்ட் எடையுடைய விதைப்பை கொண்ட மனிதன்

அவரது விதைப்பையில் மேற்பட்ட 100 பவுண்டுகள் எடை திரவம் கொண்டு பருத்துள்ளது. இதனால் அசாதரணத் தன்மையினால் அவருக்கு சாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவது கஷ்டமாகவுள்ளது. இதனால் அதைச்சுற்றி ஒரு தலையணையை வைத்துக்கொண்டு திரிகின்றார். அதிகளவான எடையினால் சுவாசிப்பதில் சிரமப்படுகிறார். அவரால் வேலை செய்ய முடியாது. சிறுநீரைக் கட்டுப்படுத்தமுடியாமல் உள்ளது.
வீதியில் செல்லும்போது மக்கள் இவரை விசித்திரமாகப் பார்க்கின்றனர். இதனால் இவர் மனம் சோர்வடைந்து காணப்படுகின்றார். இதனால் அதிகளவான நேரத்தை வீட்டிலேயே செலவிடுகிறார். இவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு 1 மில்லியன் பணம் தேவைப்படுகின்றது.
இப்பணம் என்னிடம் இருந்தால் எல்லோரும்போல் சாதாரணமாக என்னாலும் இருக்கமுடியும். நான் ஒரு ஏழை. தனவந்தர்கள் எனக்கு உதவி செய்தால் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என வெஸ்லி வாரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
நீங்களும் வெஸ்லி வாரனுக்கு உதவ விரும்பினால் benefitballsack@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்.
இதோ பாதிக்கப்பட்ட வெஸ்லி வாரனின் வீடியோ துருவம் வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 18 அக்டோபர், 2011
மரதன் ஓட்டம் ஓடும் 100 வயது தாத்தா

பிரித்தானியாவைச் சேர்ந்த 100 வயதான தாத்தா ஒருவர் கனடாவின் தலைநகரான டொரண்டோவில் மரதன் ஒட்டத்தை முடித்துள்ளார். இவர்தான் உலகின் அதி வயதுகூடிய மரதன் வீரர் என்ற பெருமையையும் தட்டிக் கொண்டுள்ளார். இவரின் பெயர் பெளஜா சிங்.
ஞாயிற்றுக்கிழமை அன்று ஓடிய சிங் 8 மணி நேரம், 25 நிமிடங்கள், 16 நொடிகளில் 26 மைல் தூரம் மரதன் ஓட்டத்தை ஓடி முடித்துள்ளார்.
தனது மனைவி, மகனின் இறப்பின் பின்னர் 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடத்தொடங்கிய சிங் ஒவ்வொரு நாளும் 10 மைல் தூரம் ஓடியுள்ளார். இவர் தினமும் இஞ்சியால் செய்த குழம்பையும், தேநீரையுமே பிரதானமாகக் கொண்டுள்ளார். தான் எப்போதும் சந்தோசமாக இருப்பதே வெற்றியின் ரகசியம் என்றும் குறிப்பிட்டள்ளார்.
360 பாகையில் படமெடுக்கும் கமெரா கண்டுபிடிப்பு
புகைப்படத்துறையில் தற்போது புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. முதன்முறையாக 360 பாகையில் சுழற்சி முறையில் அழகிய புகைப்படங்களை எடுக்கக்கூடியவாறு ஒரு மாறுபட்ட கமெரா தயாரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான கமெரா வடிவத்திலிருந்து மாறுபட்டு ஒரு பந்துபோல இருக்கின்றது.
பேர்லின் தொழில்நுட்பவியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட இப்பந்துக் கமெராவில் 36 நிலையான கமெராக்காள் உள்ளன. இவை 2 மெகாபிக்சல் மொபைல் போனின் கமெராவை ஒத்தது.
இந்தப் பந்துக் கமெராவை மேலே எறிந்துவிட்டால் அது உச்சத்தை அடைந்தபின்னர் அனைத்து திசைகளிலும் புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறது. பின்னர் 36 படங்களையும் ஒன்றுசேர்த்து ஒரு 360 பாகையில் ஒரு புகைப்படமாகக் காட்டுகின்றது.
பாடசாலை மாணவி மர்மான முறையில் மரணம்

குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, தக்மல்கொட மகா வித்தியாலய சாரணர் பிரிவிலிருந்து பயிற்சிக்காக ரன்டம்பே சென்ற 15 வயது மாணவி சந்தமாலி அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ரன்டம்பே பயிற்சின்போது இரவு ஓய்வறைகளில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மாணவிகள் அறையில் ஒரு சத்தம் கேட்டு அனைத்து மாணவிகளும் விழத்துக்கொண்டனர் சந்தமாலியைத் தவிர. களைப்பின் காரணமாக சந்தமாலி நன்றாகத் தூங்கியுள்ளார் என்று நினைத்த சக மாணவிகள் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.
எனினும், காலை விடிந்த பின்னரும் விளத்துக்கொள்ளாததைக் கண்டு சக தோழிகள் உடனேயே மேலதிகாரிக்கு அறிவி்த்துள்ளனர். எனினும் அவர்கள் எழுப்பும்போது சந்தமாலியின் உயிர் பிரிந்திருந்தது.
பயிற்சிக்குச் செல்ல முன்னர் வைத்திய அதிகாரிகள் மூலம் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு தேகாரோக்கியம் உள்ளவர் சந்தமாலி என்று நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான மாணவி தனது உயிரைவிடக் காரணம் என்ன...? இந்தக் கேள்விக்குறிக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
குருநாகல் துருவம் செய்தியாளர் பஹமுனை அஸாம்
விரைவில் பெற்றோலின் விலை அதிரிக்கக்கூடும்

உலக சந்தையில் பெற்றோலி்ன் விலை அதிகரித்திருப்பதனால் இலங்கையிலும் விரைவில் பெற்றோலின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பிலிருந்து செய்திகள் தற்போது கசிந்துள்ளன.
இவ்வருடம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 50 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமைகளைச் சமாளிக்கவுமே இலங்கையில் பெற்றோலின் விலை அதிகரிக்கப்படவுள்ளன. தற்போது ஒரு லீற்றர் பெற்றோல் 125 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்
செவ்வாய், 11 அக்டோபர், 2011
கல்முனையின் மேயர் பதவிக்கு அடிதடி
நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகரில் அமோக வெற்றியீட்டியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
அடுத்து கல்முனை மாநகர சபை மேயர் யார் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதற்கினங்க நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 2ஆவதாக விருப்பு வாக்குகளைப் பெற்ற நிஸாம் காரியப்பரை தெரிவுசெய்ய கட்சி எத்தனித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சர்ச்சையி்ல் முடிந்த கட்சிக் கூட்டத்தில் யார் கல்முனை மேயர் என்று அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து நாளை (12.10.2011) மீண்டும் கட்சியின் உயர்பீடம் கூடி யார் மேயர் என்று அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களில் இன்றிரவு வீதிகளில் மக்கள் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் வீதியில் டயர்களைப் போட்டும் எரித்துள்ளனர். அத்துடன் பஸ்களின் கண்ணாடிகளுக்கும் கல்லெறிந்துள்ளனர். இதனால் கல்முனை மாநகரம் அமளிதுமளிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியையைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற முஹம்மட் ஸிராஸ் என்பவரை மேயராக பரிந்துரை செய்யவேண்டும். ஸிராஸுக்கே அதிகளவான ஆதரவு கல்முனையில் இருக்கின்றது. சிராஸ் 16,457 வாக்குகளையும், நிஸாம் காரியப்பர் 13,948 வாக்குளையும் பெற்றிருந்தனர். ஆனால், சில உட்பூசல்கள் காரணமாக அதற்கு அடுத்த நிலையிலுள்ள நிஸாம் காரியப்பரை மேயராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பெரிய குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
கல்முனையில் ஸிராஸுக்கு மேயர் பதவி வழங்கப்படாவிட்டால், நாளை கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பள்ளிவாசல்களில் இன்று மக்களை அமைதியாக இருக்குமாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை யார் கல்முனையின் மேயர் என்று தெரியவரும்.
வெள்ளி, 7 அக்டோபர், 2011
குன்றின் விளிம்பில் மயிர்கூச்செரியும் சாகம்

சீனாவிலுள்ள தை எனும் மலைக்குன்றின் விளிம்பில் தனது உயிரைப் பணயம் வைத்து உடற்நிலையை சமப்படுத்தி சாகசங்கள் புரிகின்றார் Eskil Ronningsbakken. இவரது வயது 31. இந்த சாகசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.10.2011) அன்று நிகழ்த்தப்பட்டது. இதனை பல ரசிகர்கள் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் சக்கை போடுகிறது.
எந்த பாதுகாப்பும் இல்லாம் இந்த அதிபயங்கரமான குன்றின்மீது அமைந்துள்ளது ஒரு 6 அடி மேடையில் அவரது பொருட்கள் மாத்திரமே இருந்தது. ஒருமுறை இடத்தில் ஒரு சைக்கிளையும் ஓட்டுகிறார். முன் ஒரு கையில் சீரான கோலில் தனது சமநிலையைப் பேணி சமாந்தரமாக நின்கின்றார். அத்துடன் நாற்காலிகளை அடுக்கிவைத்து அதிலும் தனது வித்தையைக் காட்டுகிறார்.
அவரது சாகத்தை மூங்கில் பூக்கள் இணையத்தள வாசகர்களுக்காகத் தருகின்றோம்.
புதன், 28 செப்டம்பர், 2011
3 கார்களைத் தாண்டி நீளம் பாய்ந்து சாதனை

நீளம் பாய்தல் போட்டியில் சம்பியனான ஜே.ஜே. ஜெகெட் விசேடமாக வடிவமைக்கப்பட்ட பாதையில் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். சமாந்தரமாக 3 கார்களை நிறுத்திவிட்டு அதற்கு மேல் போடப்பட்டுள்ள பாலத்தினை தாண்டி நீளம் பாய்ந்தள்ளதால் இந்த புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
நான் எப்போதும் வேடிக்கையான வழியிலேயே திறமைகளை நிரூபிக்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையிலேயே நான் இவ்வாறு 20 நீளத்தை 3 கார்களை வைத்துக்கொண்டு தாவினேன் என்று ஜே.ஜே. ஜெகெட் அங்கு தெரிவித்தார்.
ஜே.ஜே. ஜெகெட் தற்போதைய இங்கிலாந்து அதிக நீளம் பாயும் சம்பியனாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவரது சம்பியன்சிப் நீளமாக 8.04 மீற்றர் (26 அடி) உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதிகநாள் வாழும் இரட்டைத்தலை பூனை

அண்மையில இரட்டைத்தலை பூனை ஒன்று தனது 12ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. இதன் பெயர் Frankenlouie. இதுவே தற்போது உலகில் வித்தியாசமான பிறப்புடன் அதிகநாள் உயிர்வாழ்ந்த பூனையாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பூனைக்கு 3 கண்கள், 2 வாய் மற்றும் 2 மூக்குகள் உள்ளன. இவை பிறவியிலேயே இவ்வாறுதான் இருந்துள்ளது.
இது இரண்டு பூனைகள் அல்ல. ஒரு பூனையில் இரட்டைத் தலையில் ஒரு மூளை மட்டுமே இதன் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. 2 கண்களும் சாதரணமாக செயற்படுகின்றன. மூன்றாவது கண் மத்தியில் இருப்பது செயலிழந்து காணப்படுகி்ன்றது.
அதன் உரிமையாளர் மார்ட்டியுடன் இத வாழ்ந்து வருகின்றது. இந்தப் பூனைகூட "அதிகநாள் உயிர் வாழ்ந்த அசாதரண பூனையாக" தற்போது கின்னஸில் பதிவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உயிருடன் இருந்த தாயை சவக்கிடங்குக்கு அனுப்பினர்
பிரேசில் நாட்டில் ஒரு மருத்துவ தாதியும் வைத்தியர் ஒருவரும் இறந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் Rosa Celestrino de Assis எனப்படும் பெண்ணை சவச்சாலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள். இப்பெண் நியுமோனியாவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அப்பெண் சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டாள்.
ஆனால், அவர்ருடைய AFP அறிக்கையில் இறந்ததாக குறிப்பிடப்படவில்லை. அசோசியேட்டட் பிரஸ் செய்தியின்படி, அவரது மகள்மாரான Rosangela Celestrino, Celestrino de Assis இருவரும் கடைசி நேரத்தில் தனது தாயைப் பார்த்துவிட்டுச் சென்றதாக பிரேசில் பத்திரிகை ஒன்றுக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதேவேளை, Rosa Celestrino ஏற்கனவே சவக்கிடங்கிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் இருந்தபோதுதான் மகள்மார் பார்த்தாக சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ். நியூஸ் அறிக்கையின்படி ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்திருந்து 2 மணி நேரத்தின் பின்னரே சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஏ.பி.சி. நியூஸ் இன்படி, Celestrino de Assis இறந்துவிட்டதாக அறிவித்த வைத்தியர் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டார். ஆரம்பத்தில் முக்கிய அறிகுறிகள் ஏதும் தென்படுகிறதா என சோதிக்காமையால் அந்த மருத்துவ தாதியும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உயிருடன் இருப்பவரை சவக்கிடங்குக்கு அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. இந்த வருடம் ஜூலையில், தென்னாபிரிக்காவில் இதேபோன்று சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தார். அம்மனிதன் 21 மணிநேரத்தின் பின்னர் தன்னைப் பூட்டிவைத்திருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து எழுந்துள்ளார். சவக்கிடங்கில் பணிபுரியும் தொழிலாளர்கள் பேய் என்று கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர்.
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
உலகில் மிகப்பெரிய "நாண் ரொட்டி"

உலகில் மிகப்பெரிய நாண் ரொட்டியை சீனாவின் ஒரு உள்ளூர்ப் பகுதியில் தயாரித்துள்ளார்கள். இதனை 6 மீற்றர் அகலம் கொண்ட அடுப்பில் சுட்டுள்ளனர்.
இது மிகவும் துல்லியமான முறையில் கட்டப்பட்ட அடுப்பிலேயே சுடப்பட்டது. இந்த நாண் ரொட்டியின் விட்டம் 2.75 மீற்றராகும். இதில் அடங்கியுள்ள 30 கிலோ ஆட்டிறைச்சியும், 125 கிலோ மாவும், 16 கிலோ வெங்காயமும் 90 கிலோ தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது.
நாண் ரொட்டி சுடுவதில் நன்கு பயிற்சிபெற்ற 12 உள்ளூர் தொழிலாளர்கள் இதனைச் செய்து முடித்துள்ளனர். இதனைச் தயாரிக்க 10 மணித்தியாலங்கள் எடுத்தது.
உலகில் மிகச்சிறிய டிஜிட்டல் கமெரா
உலகில் மிகச் சிறிய கமெரா விரல் நுனியளவு மிகவும் சிறியதாக உருவாக்கப்பட்டள்ளது. இதனால் 2 மெகா பிக்ஸல் அளவுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கமுடியும். இது 1 அங்குலம் அளவுடையது. இதன் எடை அரை அவுன்ஸ் மட்டுமே. விலை £ 65. இதனைப் பயன்படுத்த சில்லறை விற்பனையாளர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.
பேச்சாளர் ஒருவர் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது; மனித விரலினால் கமெராவின் ஷட்டர் பொத்தானை ஒரு தடவை தொடுவதன் மூலம் ஒரு புகைப்படத்தை எடுக்கமுடியும். உலகின் மிகச்சிறிய கமெரா ஒரு பளிங்கைவிட சற்று பெரியது என்றாலும், அதன் படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் மிகப்பெரிய கமெராக்களில் எடுப்பது போலத் தோன்றுகிறது.
இதன் பிளஸ் தன்னியக்கமுடையது. இதன் புகைப்படங்கள் 640 x 480 பிக்ஸல் (Resolution) உடையது. இதன் வீடியோ ஒரு செக்கனுக்கு 30 பிரேம்கள் கொண்டது. 1600 x 1200 அளவுடைய AVI வீடியோக்களையும் இதனால் பதிவுசெய்ய முடியும். இதனால் பிடிக்கப்படும் JPEG புகைப்படங்கள் 2 MP அளவுடையது. இதில் 2 GB அளவுடைய மெமரி கார்டைப் பொருத்தி அதில் புகைப்படங்களையும, வீடியோக்களையும் சேமிக்க முடியும். இதன் ரீசார்ஜ் பெற்றி 30 நிமிடங்கள் வரை செயற்படக்கூடியது.
வாஷிங்டன் நினைவு சின்னத்தினுள் பூகம்பம்

வாஷிங்டனிலுள்ள நினைவுச் சின்னத்தினுள் திங்கட்கிழமை பிற்பகல் பாரியளவிலான ஒலி எழும்பியுள்ளது. தேசிய பூங்கா சேவைப் பகுதியில் ஓகஸ்ட் 23 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு்ள்ளது. 5.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்தப் பூமி அதிர்ச்சியின்போது நினைவுச்சின்னம் உள்ளே இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
தானியங்கி பாதுகாப்பு கமெராக்கள் மூலமாக இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன, இங்கு பார்வையிட வந்தவர்கள் மாடிப்படியிலிருந்து சறுக்கி விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த நினைவுச் சின்னம் தற்போது மூடப்பட்டு புனரமைப்புச் செய்யப்படுகின்றது.
திங்கள், 26 செப்டம்பர், 2011
உருளைக்கிழக்கு திருடனை தீயிலிட்டு எரித்தனர் (Video)
கென்யா நாட்டில் இரண்டு மூட்டை உருளைக்கிழங்கை திருடியவர்களை கை, கால்களை கட்டி கல்லால் அடித்து காயங்களை ஏற்படுத்திய பின்னர் அவர்கள் மீது பெற்ரோல் ஊற்றி உயிரோடு எரித்திருக்கிறார்கள். இது ஒரு மனிதநேயமற்ற மிருகவெறிச் செயல். வயிற்றுப் பசிக்காகத் திருடும் இந்த மாதிரியான ஆட்களை இவ்வாறு பகிரங்கமாக தீயில் இட்டுக் கொல்வது கண்டிக்கத்தக்க செயலாகும்.
எச்சரிக்கை: மென் மனம் கொண்டவர்கள், பெண்கள் தயவுசெய்து இதனைப் பார்க்கவேண்டாம்.
ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
உலகிலுள்ள மிதக்கும் ஹோட்டல்கள்
உலகில் மனிதன் எதையெல்லாம் அனுபவிக்க முடியுமோ அதையெல்லாம் அனுபவிக்கிறான். அதாவது இந்த உலகத்திலே சொர்க்கத்தை ஏற்படுத்து ஆசைப்படுகிறான். அதற்காக பணத்தை தண்ணீராய் இறைக்கிறான். அந்த வகையில் கட்டப்பட்டதுதான இதுவும். உலகிலுள்ள அனைத்து மிதக்கும் ஹோட்டல்களில் தொகுப்பே இது. இதில் அனேகமான ஹோட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாமும் இங்குபோய் தங்கலாம். உங்களது ஒரு வருட உழைப்பை ஒரு நாளைக்க செலவழிக்கத் தயாரா?






































































