அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

புதன், 7 செப்டம்பர், 2011

தினக்குரல் பத்திரிகை மூடப்படப்போகின்றதா?



தினக்குரல் பத்திரிகை மூடப்பட உள்ளதுடன் அதில் பணியாற்றிய சுமார் 180 ஊழியர்களும் நிர்க்கதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் வீரகேசரி நிறுவனம் தினக்குரல் வெளியீட்டு நிறுவனத்தின் 55 வீதத்திற்கும் மேற்பட்ட பங்குகளை கொள்வனவு செய்ததை தொடர்ந்து இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தினக்குரல் பத்திரிகையை வெளியிட்டு வந்த தினக்குரல் வெளியீட்டு நிறுவன அங்கு பணியாற்றும் 180 ஊழியர்களில் 150 ஊழியர்களிடமிருந்து இராஜினாமா கடிதங்களை பெற்றுள்ளனர். ஆசிரியர் பீடத்தை சேர்ந்த 25 பேரும் மேலும் 5 பேருமாக சுமார் 30 பேர் மட்டுமே இராஜினாமா கடிதங்களை வழங்காமல் உள்ளனர்.

இதேவேளை, புதிய நிறுவனத்தில் இணைந்து கொண்டமைக்கான நியமனக் கடிதங்கள் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் தினக்குரல் நாளேட்டின் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் பதவி விலக வேண்டுமென தினக்குரல் நிறுவன முகாமைத்துவம் வற்புறுத்தியுள்ளது.

தனபாலசிங்கத்தின் வீட்டு தொலைபேசியில் தொடர்புகொண்ட தினக்குரல் நிறுவன முகாமைத்துவம் 55 வயது சென்றமையினால் பதவி விலகவேண்டும் எனக் கோரியுள்ளது. ஆனால், ஆசிரியர் தனபாலசிங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் எந்த நிறுவனத்தில் இருந்து பதவி விலகுவது என கேள்வி எழுப்பியுள்ளார்.

தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவேட் லிமிட்டெட் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பித்து இந்த ஆண்டு மே மாதம் வீரசேகசரி நாளேட்டை வெளியிடும் எக்ஸ்பிரஸ் சிலோன் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தக்கு விற்பனை செய்துள்ளது.
இதனால் கடந்த யூன் மாதம் முதல் ஏசியா மீடியா பப்ளிகேஸன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவட் லிமிட்டட் என்ற பெயரின் தினக்குரல் நாளேடு வெளிவந்தபோது பணியாற்றிய ஊழியர்கள் புதிய நிறுவனத்தில் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றனர்.

எனினும் தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவட் லிமிட்டெட்டில் பணியாற்றிய ஊழியர்கள் பதவி விலகல் கடிதங்களை கையளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் வாய்மொழி மூலமாக வற்புறுத்தியுள்ளனர். அவ்வாறு பதவி விலகல் கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே ஏசியா மீடியா பப்ளிகேஸன் நிறுவன கடிதத்தலைப்பில் புதிய நியமன கடிதங்கள் கையளிக்கப்படும் என பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் இந்த மாதம் முதலாம் திகதியுடன் 55 வயதை பூர்த்தி செய்துள்ளார். அதனால், அவர் பதவி விலகவேண்டும் என ஏசியா மீடியா பப்ளிகேஸன் நிறுவனம் கேட்டுள்ளது. ஆனால், நியமனக்கடிதம் இல்லாமல் எவ்வாறு பதவி விலகுவது என்றும் தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவட் லிமிட்டட் விற்பனை செய்யப்பட்டு அந்த நிறுவனம் மூடப்பட்டமை தொடர்பாகவோ அல்லது அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது அதில் இருந்து நீங்கள் விலகுங்கள் என்று உத்தியோகபூர்வமாகவோ அறிவிக்காத நிலையில் எந்த நிறுவனத்தில் இருந்து தான் விலகுவது என தனபாலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவேட் லிமிட்டெட்டில் இருந்து ஏசியா மீடியா பப்ளிகேஸன் ஆக மற்றமடைந்த பின்னரும் தான் பிரதம ஆசிரியராக தினக்குரல் நாளேட்டில் கடமையாற்றியதாகவும் சுட்டிக்காட்டியுள்ள தனபாலசிங்கம் இது ஒரு சட்டப் பிரச்சிணை என்றும் கூறியுள்ளர்.

இதேவேளை, தங்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதிகள் ஊழியர் நம்பிக்கை நிதிகள் எதுவும் தொழில் திணைக்களத்தக்கு சட்ட ரீதியாக செலுத்தப்படாத நிலையில் தினக்குரல் பப்பளிகேஸன் பிரைவேட் லிமிட்டெட் ஏசியா மீடியா பப்ளிகேஸனாக எவ்வாறு மாற்றமடையும் என கேள்வி எழுப்பியுள்ள ஊழியர்கள் இது தொடர்பாக தொழில் திணைக்களத்துக்கு முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய முக்கியஸ்தர்களுடன் நாம் தொடர்புகொண்டு இப்பிரச்சினையில் அங்கு பணியாற்றும் ஊடகவியலாளர்களின் தொழில் பாதுகாப்பிற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா என கேட்ட போது; தமது சங்கம் ஒரு தொழிற்சங்கம் அல்ல என்றும் எனினும் தொழிற்திணைக்களம் மற்றும் ஏனைய ஊடக அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்தனர்.


இதுதொடர்பாக அங்கு பணியாற்றிய ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ''ஆசிரியர் பீடம் தவிர்ந்தவர்களில் அனேகமானோர் தங்களது இராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் எங்களிடம் கடிதங்களை கேட்டு வாங்கினர். முன்னர் இருந்த நிறுவனம்தான் இப்போது பெயர் மாறுகின்றது. அதற்கு ஏன் இராஜினாமா கடிதம் கொடுக்கவேண்டும்? என்பதே எமது கேள்வி. இதில் ஏதோ உள்குத்து இருக்கின்றது.''

இன்னொருவர் கருத்து தெரிவிக்கும்போது, எங்களிடம் இராஜினாமா கடிதம் வாங்கிட்டு புதிய நிறுவனமான ஏசியன் மீடியா (பிரைவேட்) லிமிட்டெட் என்ற நிறுவனத்தில் இணைந்துகொண்டதாக கடிதம் தந்தார்கள். என்ன நடக்கிறது என்றுதான் தெரியல என்றார்.

அத்துடன் தற்போது தினக்குரல் நிர்வாகக் குடும்பத்தினர் இந்தியா சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர் பீடத்தினர் கடிதம் கொடுப்பதில்லை என்ற உறுதியில் உள்ளனர். இவர்களில் அனேகமானோருக்கு குழப்பமே எஞ்சியுள்ளது. சரியான தகவலை நிர்வாகம் வழங்காமல் இவ்வாறு நடந்துகொள்வது ஊழியர்களிடையே சந்தேகத்தையே எழுப்புகின்றது.


அத்துடன், இன்றைய தினக்குரலின் முன்பகத்தில் இதனை மறுப்புத் தெரிவித்து செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் தினக்குரலை கே.பி. வாங்கப்போவதாக இணையத்தில் செய்தி வெளியாகியிருந்தது. பின்னர் வீரகேசரிக்கு உரிமம் மாறியது. அப்போதும் பத்திரிகையி்ல் மறுப்புத் தெரிவித்து ஆசிரியர் தலையங்கமும் தீட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites