அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஜனாதிபதிக்கு பெண்கள் இரத்தம்?



பொத்துவிலில் கிறீஸ் பூதங்களின் தாக்குதல்களிற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி மக்கள் பொலிஸாருக்கு எதிரக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனை சுமூகமாக நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் இன்று நண்பகல் பொத்துவில் ஜிம்பா பெரிய பள்ளிவாசலில் நீதி அமைச்சர் றவூப் ஹக்கிம், சிரேஸ்ட அமைச்சர் பௌசி, பிரதி அமைச்சர் ஹிஸ்முள்ளா, உள்ளுராட்சி மாகாணசபை அமைச்சர் அதாவுள்ள ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.


இதன்போது அமைச்சர் பௌசி, ஜனாபதியின் நீண்ட ஆயுளை வேண்டி நடாத்தப்படும் பூஜைக்காக இளம் பெண்களின் இரத்தம் வேவைப்படுவதாக கதை ஒன்று சோடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யான செய்தியே என தெரிவித்தார். அவ்வாறு ஜனாதிபதிக்கு உண்மையிலேயே இரத்தம் தேவைப்படும் எனின் "ஜனாதிபதிக்கு இரத்தம் தேவை என அறிவித்த மறுகணமே இலட்சக்கணக்கான இளம் பெண்கள் இரத்ததானம் செய்ய வரிசையில் காத்திருப்பர்" எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான விசமிகளினால் தான் இத்தகைய செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டத்தை நிலைநாட்ட வேண்டியது பொலிஸாரின் கடமை, அதனை செய்யாது அவர்களே சட்டத்தை மீறுவது குற்றம் என அமைச்சர் றவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். இந்த மர்ம மனிதனால் ஏற்படுத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பொத்துவிலில் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை



0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites