அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இன்று கிண்ணஸ் உலக சாதனையொன்று நிலைநாட்டப்பட்டது

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்டனப் பேரணி

கிழக்கு மாகாணத்தில்‌ கிறீஸ் மனிதனைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்தும் பெண்கள்

கிழக்கு மாகாணசபையால் நடாத்தப்படும் நடுக்கடலுக்குள் சொகுசுப் பயணம் East Expo-2011

கவனிப்பாரற்ற நிலையில் வாழும் யாழ்ப்பாணம் மத்ரஷா வாழ் அகதிமுகாம் மக்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

தென்கிழக்கில் சூடுபிடிக்கும் நோன்புப் பெருநாள் வியாபாரம்


எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.எல். மன்சூர்

கடந்த சில வாரங்களாக மர்ம மனிதன் சர்ச்சையைத் தொடர்ந்து வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்வச்சம் ஓரளவுக்கு நீங்கியதையடுத்து மக்கள் பிரதான வீதியிலும் மற்றும் உள்ளுர் கடைகளிலும் புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


நோன்பு காலம் முடிவுறும் நிலையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இரவு காலங்களில் மக்கள் உடுப்புக்களை வாங்குவதில் இரவு 12.00 மணிவரையும் புடவைக் கடைகளில் மக்களைக் காணக்கூடியதாக இருந்தது. அப்பாடா பயப்பீதி மட்டும் ஓய்ந்து விட்டதே என்கிற கவலையின்றி மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்கள் இராக்காலம் பகற்காலங்கள்போல் தோற்றமளிப்பதையும் தற்போது காணக்கூடியதாக இருக்கிறது.


இதேவேளையில் வெளியூர் அங்காடி வியாபாரிகள் மர்ம மனிதன் தொடர்பான பிரச்சினையால் இப்பகுதிக்கு வியாபாரத்திற்காக வருகைதர பயந்திருந்தவர்களும் தற்போது தமது வியாபாரத்தை மேற்கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

கல்முனையில் அரசாங்கத்தை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸ்


எஸ்.எம்.எம்.றம்ஸான்

அரசாங்கத்ததோடு இணைந்திருக்கும் நாங்கள் அரசாங்கத்தை எதிர்த்தது கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கு அம்பாறை கச்சேரியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கும்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன்அலி மேற்கண்டவாறு கூறினார்.


மேலும் அவர் கூறுகையில்; இத்தேர்தலை நேசசக்தியோடுதான் நடாத்தவுள்ளோம் எமது பிரச்சாரங்கள் கூட எதிர்கால இனப்பிரச்சினை தொடர்பாகவே பெரும்பாலும் அமையும். நாங்கள் 7  மாநகர சபையில் தனித்தும் அரசாங்கத்துடன் சேர்ந்தும் போட்டியிடுகிறோம். ஆனால் கல்முனை மாநகரசபையில் தனித்துத்தான் போட்டியிடுகிறோம் இதனால் இத்தேர்தலில் ஆரோக்கியமான பிரச்சாரங்களை மேற்கொண்டு அமைதியான நல்லதோர் தேர்தலை நடாத்துவதற்காகவே களமிறங்கியுள்ளோம். என்றார்.

கல்முனை மாநகர சபையை மீண்டும் உங்களது கட்சி கைப்பற்றுமா? என வினவியபோது…

நிச்சயமாக வெற்றி பெறுவோம் ஏனெனில் கடந்தகாலங்களில் மக்கள் எமது கட்சிக்கு அளித்த வாக்குகள் மற்றும் ஆதரவுகளின் பிரதிபலனாக நிச்சயமாக நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றதுடன் நல்ல மிகவும் திறமையான வேட்பாளர்களை இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தும் உள்ளோம் என்றார்.

மேயராக உங்கள் கட்சியினால் குறித்த வேட்பாளர் ஒருவரை அடையாளப் படுத்தியுள்ளீர்களா? எனக்கேட்க...

இல்லை. ஆனால் அதை கட்சி தீர்மானிக்கும் எனக் கூறினார்.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மக்கள் தரிப்பிடம்


எஸ்.எம்.எம்.றம்ஸான்


நீண்டகால காலமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து வந்த மக்களின் தற்போது நிறைவேறியுள்ளது. மேற்படி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை நோயாளிகளைப் பார்வையிட வெளி இடங்களில் இருந்து வருவோர் தங்குவதற்கு அல்லது உரியநேரம் வரும்வரை காத்திருப்பதற்கு ஓர் இடம் இல்லாமல் மக்கள் பாரிய சிரமங்களை இவ்வளவு காலமாகவும் எதிர் நோக்கி வந்தனர். 


அதனை ஓரளவுக்கு நிறைவேற்றும் நோக்கோடு இன்று மாலை பெண் பார்வையாளர்களுக்கு மட்டும் ஏற்றவாறு மக்கள் தரிப்பிடம் ஒன்றை வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் ஏற்பாட்டில் புணரமைக்கப்பட்ட மக்கள் தரிப்பிடத்தை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம்.நஸீர் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

21 நாட்களுக்குள் அகிம்சைப் போராட்டம் - பட்டதாரிகள்


எஸ்.எம்.எம்.றம்ஸான்

சனிக்கிழமை (2011.08.27) அன்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் அகில இலங்கை பொது ஊழியர் முன்னணியும் தொழில்ரீதியாக தகுதிவாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாப் பட்டதாரிகளின் தொழிற்சங்கமும் இணைந்து நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள்.


வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைகளுக்கான தீர்வு:

01. நாடு பூராகவும் வேலையற்றிருக்கம் பட்டதாரிகளுக்கு அவர்களின் கஷ்டநிலையினை கருத்தில் கொண்டு துரிதமாக நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

02. 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐந்தாறு வருடங்களாக வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் பெற்றோரில் தங்கி வாழ்கின்றார்கள். இதனைக் கருத்திற் கொண்டு 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தைப் போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

03. விஷேடமாக வடகிழக்கிலுள்ள பட்டதாரிகள் பல இன்னல்களுக்கு மத்தியில் மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். ஆகையால் வடகிழக்கிலுள்ள பட்டதாரிகளின் நியமனத்தை முன்னுரிமைப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள ஆவணைசெய்ய வேண்டுமம்.

04. வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் தொடர்பாக ஏனைய மாகாணங்களில் நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதைப் போன்று கிழக்கு மாகாண சபையிலும் வடக்கு அரச நிர்வாகத்தினாலும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள பணிப்புரை செய்ய வேண்டும்.

05. மக்கள் சபைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2 வருடங்களை எட்டி நிற்கின்றது அதுமாத்திரமன்றி இரண்டு முறை நேர்முகப் பரீட்சைக்காக அனுப்பட்ட கடிதங்கள் இடைநிறுத்தப்பட்டமையினால் பட்டதாரிகள் மனவேதனையடைந்து காணப்படுகின்றார்கள்.


06. பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் பொழுது அரச வயதெல்லையான 45 வயதை கட்டாயமாக கருத்தில் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

07. ஒழங்கமைக்கப்பட்ட அடிப்படையில் நியமனம் வழங்ககுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டடிப்படையில் நியமனம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டம்.

08. 2005ஆம் ஆண்டு கௌரவ ஜனாதிபதி அவர்கள் பிரதமராக இருக்கும் போது நேர்முகப் பரீட்சை மூலம் நியமனம் வழங்கப்பட்டன. அதே வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.

09. அதுமாத்திரமன்றி பட்டதாரிகளுக்கு பரீட்சைகளை நடாத்தி காலம் கடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. வடகிழக்கிலுள்ள ஊனமுற்ற பாதிப்படைந்த 45 வயதை தாண்டும் வயதுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

11. அகதி முகாம்களில் மாத்திரமன்றி விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற வடகிழக்கிலுள்ள பட்டதாரிகளுக்கு உரிய நடவடிக்கைகளின் மூலம் நிவாரணம் வழங்குதல் வேண்டும்.

12. கிழக்கு மாகாணத்திற்கும் வடமாகாண நிர்வாகத்திற்கும் பட்டதாரிகள் தொடர்பாக உடன் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரமளிக்கப்ட வேண்டும்.

13. வடகிழக்கிலுள்ள நிர்வாக வெற்றிடங்களை பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

14. வருடந்தோறும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் உயர்கல்வி நிறுவனங்களிலிருந்தும் வெளியாகும் பட்டதாரிகளுக்கு வருடாவருடம் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பது போன்று கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.


15. துறைசார்ந்த தொழிநுட்பவியல் பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கும் துரித முறைமையொன்று பின்பற்றப்படல் வேண்டும்.

16. திட்டமிட்டவாறு 15000 பட்டதாரிகளுக்கு உடன் விண்ணப்பம் கோரப்பட வேண்டும்.

17. ஜனாதிபதியினால் வடகிழக்கு மாகாண சபைக்கு இருக்கும் வெற்றிடங்கள் உடன் நிரப்புவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட வேண்டும்.

18. இன்றைய தினத்தில் (27.8.2011)  இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் கோரப்படாவிட்டால் அகிம்சை போராட்டம் ஆரம்பமாகும்.

19. நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு சேவை குறிப்பை துரிதமாக வெளியிடுதல் வேண்டும்.

20. பட்டதாரிகளுக்கு தனியான சேவைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

21. கௌரவ ஜனாதிபதி அவர்கள் பட்டதாரிகளுக்கான விபரக் கோவை கோரியது கோட்டாக்களாக மாறிவிடுகின்றது. உடன் நிறுத்தப்படு விண்ணப்பம் கோரப்பட வேண்டும்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

செப்டெம்பர் 11 தாக்குதல் ஒரு ரகசியம்


அமெரிக்காவைக் கதிகலங்க வைத்த செப்டம்பர் 11ஆம் திகதிய தாக்குதல் நடைபெறுவதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே, அதுபற்றிய உளவுத் தகவல் கிடைத்த விஷயம் வெளியாகி,  மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த உளவுத் தகவல் பிரென்ச் உளவுத்துறை DGSEயிடமிருந்து கிடைத்திருந்தது. இந்தத் தகவலை வெளியிட்டு பரபரப்பு ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கின்றது, பிரான்சில் இருந்து வெளியாகும் Le Monde பத்திரிகை.


பிரான்சின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் இந்த ரகசியத்தைத் தமக்குத் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறது அப் பத்திரிகை. அந்த அதிகாரி மூலம் பிரென்ச் உளவுத் துறையின் அதி ரகசிய கைல் ஒன்றையும் பெற்றிருக்கிறது Le Monde. பிரென்ச் உளவுத்துறையில் அதி ரகசிய பைலில் 328 பக்கங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைலில் உள்ள குறிப்புகள்தான், பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்களின் ஆதாரம்.

இதில் ஒரு குறிப்பு, ஜனவரி 5ஆம் திகதி 2001ஆம் ஆண்டு திகதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அதன் தலைப்பு – “அல்-கய்தா இயக்கம், அமெரிக்காவுக்கு எதிரான விமானக் கடத்தல் ஒன்றைத் திட்டமிடுகிறது.


குறிப்புக்களில் கூறப்பட்டுள்ள சில விபரங்கள் துல்லியமானவை.

உதாரணமாக, அமெரிக்காவுக்கு எதிரான விமானக் கடத்தலுக்கு, அமெரிக்க விமான நிறுவனங்களில் விமானங்களை கடத்துவதே அல்-கய்தாவின் திட்டம் என்ற குறிப்பு, பிரென்ச் உளவுத்துறையால் எழுதப்பட்டிருக்கின்றது. குறிப்பு எமுதப்பட்டு 8 மாதங்களின்பின் நடைபெற்றதும், அதுதான்.

அத்துடன், எந்தெந்த விமான நிறுவனங்களின் விமானங்கள் கடத்தப்படலாம் என்பதும் பிரென்ச் உளவுக் குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது.  அதில்,  அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இருக்கின்றன. இவ்வளவு துல்லியமான சில குறிப்புக்கள் இருந்தும், வேறு சில குறிப்புக்களில் கோட்டை விட்டிருக்கிறது பிரென்ச் உளவுத்துறை DGSE.


அமெரிக்காவின் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களைக் கடத்தப் போகின்றார்கள் என்ற குறிப்பு அதில் இல்லை. மாறாக, அதற்குத் தலைகீழான குறிப்பு ஒன்று உள்ளது. அதன்படி, ஐரோப்பிய விமான நிலையங்களில் இருந்து, (முக்கியமாக ஜேர்மன் விமான நிலையங்களில் இருந்து) அமெரிக்கா நோக்கிப் புறப்படும் விமானங்களைத்தான் கடத்தல்காரர்கள் குறிவைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள், ஒரே நேரத்தில் கடத்தப்படுவதுதான் திட்டம் என்ற தகவலும் இந்தக் குறிப்புகளில் இல்லை. Le Monde பத்திரிகை,  பிரென்ச் உளவுத்துறையின் ரகசிய பைலிலுள்ள குறிப்பு ஒன்றை முழுமையாகப் பிரசுரித்துள்ளது.  அதிலுள்ள விபரங்களைப் பாருங்கள்.


2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஆப்கானிஸ்தானிலுள்ள காபுல் நகரில் பின்லேடன், ரகசியக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார்.  கூட்டத்தில், தலிபான் தலைவர்கள் சிலரும்,   செஸ்னியா நாட்டு தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க விமானங்களைக் கடத்தி, அமெரிக்க இலக்குகள்மீது மோதுவது பற்றி அந்தக் கூட்டத்தில்தான் முதன் முதலில், பிரஸ்தாபித்திருக்கிறார் பின்லேடன். ஜேர்மனியிலுள்ள பிராங்பேர்ட் விமானநிலையத்திலிருந்து புறப்படும் அமெரிக்க விமானம் ஒன்றை அல் – கய்தா கடத்த எற்பாடுகள் முடிந்துவிட்டன என்று பின்லேடன் கூறியதாகத் தெரிவிக்கிறது அந்தக் குறிப்பு.

இந்தத் தகவல்கள் பிரென்ச் உளவுத்துறைக்கு எப்படிக் கிடைத்தன?


உஸ்பெக்கிஸ்தான் உளவுத்துறையிடம் இருந்து தங்களுக்கு இத்தகவல்கள் கிடைத்ததாக பிரென்ச் உளவுத்துறையின் குறிப்புக்கள் சொல்கின்றன. பிரென்ச் உளவுத்துறையின் குறிப்புக்களில், 5 விமான நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், கன்டினென்டல், யுனைட்டட் ஏயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன், ஐந்தாவதாக யு.எஸ். ஏரோ என்ற நிறுவனத்தின் பெயரும் குறிக்கப்பட்டிருக்கிறது. இது எதைக் குறிக்கின்றது என்பது சரியாகத் தெரியவில்லை. காரணம் யு.எஸ். ஏரோ என்ற பெயரில் அமெரிக்காவில் சர்வதேச விமான நிறுவனம் எதுவும் கிடையாது.

இப்படியொரு தகவல் பிரென்ச் உளவுத் துறையிடம் இருந்து கிடைத்ததை அமெரிக்கா ஒப்புக் கொள்கிறதா?


ஆம். ஆச்சரியகரமாக அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. சி.ஐ.ஏ.யின் பேச்சாளர்களில் ஒருவரான ஜோர்ஜ் லிட்டெல்,  பிரென்ச் உளவுத்துறை இந்தக் குறிப்புக்களை செப்.11ஆம் திகதி தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பே சி.ஐ.ஏ.யிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

ஜோர்ஜ் லிட்டெல்,  அவர்களுக்குக் கிடைத்தது போன்ற சில உளவுத்தகவல்கள் எங்களுக்கும் கிடைத்திருந்தன. ஆனால், தாக்குதல் நடைபெறப்போகும் தேதி அல்லது இடம் பற்றி அவர்களிடமும் தகவல் இல்லை. எங்களிடமும் தகவல் இருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.


பிரென்ச் உளவுத்துறை DGSEயின் முன்னாள் பாதுகாப்புத்துறைத் தலைவர் அலைன் சொவுட், “உளவுத்துறைகளைச் சேர்ந்த அனைவருக்குமே இப்படி ஒரு விவகாரம் திட்டமிடப்படுகின்றது என்பது தெரியும். அது ஒரு விமானக் கடத்தல் என்பதும் தெரியும். அல் – கய்தாவால் நடாத்தப்படவுள்ளது என்பதும் தெரியும்” என்று கூறியுள்ளார்.

“எமது அமெரிக்க உளவுத்துறை நண்பர்களுக்கும் தெரியும், ஐரோப்பிய உளவுத்துறை நண்பர்களுக்கும் தெரியும். எந்த நிமிடத்திலும் விமானக் கடத்தல் நடைபெறலாம் என்று, டைம் பாம் ஒன்றின் மேல் உட்கார்ந்திருப்பது போல இருந்தோம். ஆனால் கடத்தப்படப்போவது அமெரிக்காவில் இருந்து புறப்படப் போகும விமானங்கள் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியதாக எழுதியுள்ளது Le Monde பத்திரிகை.

சரி. இந்தத் தகவல்கள் உளவுத்துறைக்கு எப்படித் தெரியவந்தன?  அதைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.


அப்துல் ரஷீட் என்பவர் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த, ஆப்கான் ஆயுத வியாபாரி. தலிபான்களுக்கு ஆயுத சப்ளை செய்தவரும் அவர்தான். அதேநேரத்தில் உஸ்பெக் உளவுத்துறையுடனும் தொடர்புகளை வைத்திருந்திருக்கிறார். தலிபான்களின் தொடர்பு மூலமாக தனது ஆட்களை அல்-கய்தாவின் முகாம்களுக்குள் ஊடுருவ விட்டிருந்த அப்துல் ரஷீட், அல் – கய்தா முகாம்களில் இருந்துதான் விமானக்கடத்தல் பற்றிய தகவலைப் பெற்றிருக்கிறார்.

அதை அவர் உஸ்பெக் உளவுத்துறைக்குத் தெரிவிக்க, அவர்கள் பிரென்ச் உளவுத்துறைக்குத் தெரிவித்திருக்கிறார்கள். (தகவல் கொடுத்த அப்துல் ரஷீட் இப்போது ஆப்கான் ராணுவத்தின் தளபதிகளில் ஒருவர்!)


இப்படியொரு தகவல் கிடைத்தும், அமெரிக்க உளவுத்துறை அதில் முழுமையாகக் கவனம் செலுத்தாமல் விட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. அது என்னவென்றால் அந்தக் காலகட்டத்தில் அல்-காய்தா அமைப்பு சில தந்திரங்களைச் செய்துகொண்டிருந்தது. மேலை நாட்டு உளவுத்துறைகளை திசை திருப்ப, அல்-காய்தாவே வேண்டுமென்று சில தகவல்களை லீக் செய்துகொண்டிருந்தது.

அப்படி லீக் செய்யப்பட்ட எந்தத் தகவலும், நிஜமான தகவல்கள் கிடையாது. செப். 11 தாக்குதலுக்குமுன் கடைசியாக அல்-காய்தாவால் லீக் செய்யப்பட்ட ‘போலி உளவுத் தகவல், பிரான்ஸை மையப்படுத்தியே அவிழ்த்து விடப்பட்டிருந்தது.

இதோ, இந்தத் திட்டத்தையும் பாருங்கள்:

பின்லேடனின் நெருங்கிய சகாவான ஜமால் பெகால் என்பவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்தபோது, அவரிடம் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் திட்டம் ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்தத் திட்டம், பாரிஸிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு தற்கொலைப் போராளிகளை அனுப்பி, அந்த கட்டடத்தையே தகர்க்கும் திட்டம்.


அவரிடம் இருந்த திட்டம் மிகத் துல்லியமாக இருந்தது. அமெரிக்க தூதரகம் பற்றி அவர் வைத்திருந்த விபரங்கள்கூட நிஜமானவையாகவே இருந்தன.   இதுதான் அல்-காய்தாவின் நிஜமான தாக்குதலாக இருக்கப் போகின்றது என சி.ஐ.ஏ. நம்பும் அளவுக்கு, திட்டம் முழுவதும் பக்காவாக இருந்தது.


இந்த விபரங்கள் சி.ஐ.ஏ.க்கு தெரியவந்தது எப்போது தெரியுமா?  செப். 11ஆம் திகதிய தாக்குதலுக்கு, சில தினங்களுக்கு முன்பு!அமெரிக்க மற்றும் பிரென்ச் உளவுத்துறைகள் பாரிஸிலுள்ள அமெரிக்கத் தூதரக தற்கொலைத் தாக்குதல் பற்றிக் கவனம் செலுத்திக் கொண்டிருக்க செப்டம்பர் 11இல், அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்றது.

- மூலம் Le Monde பத்திரிகை

எப்போது கிழியும் யாழ். முஸ்லிம்களின் அகதி முகத்திரை?


கவனிப்பாரற்ற நிலையில் யாழ். மத்ரஷா முகாம் முஸ்லிம்கள் 

தட்சா. ஜோ (MRTC)

‘கஸ்டப்படனும்னு தலவிதி. எங்களுக்கு விடிவு எப்பவரும்னு நாள் எண்ணிக்கிட்டிருக்கம் ‘எல்லாம் செய்றம்.. எல்லாம் செய்றம் என்று சொல்றவங்க.. ஒன்னும் செய்றதாக் காணல எனும் வார்த்தைகள் யாழ் முஸ்லிம்கள் இவ்வளவு காலமும் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தின. புத்தளத்தில் இருந்து வந்து எட்டு மாதமாகியும் எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில் வாழ்கின்றனர் இம்மக்கள்.  அவர்களது குரலில் வாழ்வின் விரக்தியும் ஏமாற்றமும் சேர்ந்தே ஒலிக்கின்றது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்து அவர்களுக்கு அகதி நிலைதான். ஒருவித உதவியும் இல்லாமல் வெறும் நம்பிக்கையுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை சந்தித்தபோது அறிந்து கொண்டேன். ‘நம்பிக்கை வீணாயிருமோன்னு பயமாருக்கு என கூறிய நடுத்தர வயதுப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணீரும் ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தன.


இத்தகைய வலிகளைச் சுமந்து கொண்டு வேதனையில் வாழும் மக்கள் வேறுயாருமில்லர். யாழ் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் மத்ரஷா பாடசாலையில் வாழ்ந்து வரும் மக்கள்தான். மத்ரஷா பாடசாலை. இவ் அகதிமுகாமானது யாழ் நகரை அண்டி அமைந்துள்ள மானிப்பாய் வீதியில் ஐந்து சந்திப் பகுதி வழியாகச் சென்றால் வருவோரை வரவேற்கும். இருபத்தியிரண்டு வருடங்களின் பின் மீளக்குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், பாவனையற்ற மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகள், நேரம் தவறாமல் பிரார்த்தனை நடைபெறும் பள்ளிவாசல்கள் போன்றவை சூழ, அமைதியின் இருப்பிடமாகவும் வலிகளின் சாட்சியாகவும் காணப்படுகின்றது இந்த பாடசாலை முகாம்.

இம்முகாமில் வசிப்பவர்களுக்கு நிரந்தர இடமில்லை. இவர்களிற் சிலர் இதுவரை காலமும் புத்தளத்திலும் சிலர் மன்னாரிலும் வசித்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் கடலில் மட்டி பிடித்தலையும் இரும்பு ஏற்றலையுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். பதினைந்து குடும்பங்கள் வாழும் இம்முகாமில் நாம் சென்றபோது எட்டு குடும்பங்களையே சந்திக்க முடிந்தது. இங்குள்ள பாடசாலை மாணவர்கள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் தமது படிப்பைத் தொடர்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இங்குள்ள பெண்கள் வெவ்வேறு காரணங்களால் கணவனை இழந்தும் பிரிந்தும் வாழ்கின்றனர் எனும் தகவல் சற்று வலிக்கத்தான் செய்தது.


மத்ரஷா பாடசாலையின் வகுப்புக்கள் தற்போது சமையலறையாகவும் படுக்கையறையாகவும் பொருட்கள் வைத்தெடுக்கும் அறைகளாகவும் மாற்றமடைந்துள்ளன. வகுப்புகளுக்கு கதவுகள் இல்லை. அருகிலுள்ள பள்ளிவாசலிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து திரட்டும் பணம் அன்றைய பொழுதுக்கே போதாமல் இருக்கும் நிலைமையில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமது எதிர்காலம், நடைமுறை வாழ்க்கை போன்றவற்றை சிந்தித்தே இம்மக்களுடைய வாழ்க்கை வீணாகிக்கொண்டிருக்கின்றது. ஏதோ ஒரு நம்பிக்கைதான் அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. 

மத்ரஷா பாடசாலை முகாம் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக இங்கு சென்றபோது என் கண்ணிற்தென்பட்ட பாடசாலை மாணவனான றொஷானிடம் முகாம் பற்றிக் கேட்டேன் “நான் மன்னார்லயிருந்து வந்திருக்கன். தரம் ஏழு படிக்கிறன். முதல்ல மன்னார்ல படிச்சிட்டு இப்ப இங்க வந்து படிக்கிறது கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு. நான் நல்லா ஸ்போட்ஸ் செய்வன். நல்லாப் படிப்பன். ப்ரண்ட்ஸை விட்டுட்டு வந்தது கவலையா இருக்கு. இங்க வசதியே இல்ல. வசதி கொஞ்சம் செஞ்சி தந்தரணும் எண்டு எதிர்பார்க்கிறன் என்றான் ஏக்கத் தொனியில்.


இவை பற்றிய மேலதிக தகவலைப் பெறும் நோக்கில் அங்கிருந்த குடும்பத் தலைவியான சலீம் மரினியாவிடம் முகாம் வாழ்க்கை பற்றிக் கேட்டேன். “போன மார்கழில இங்க வந்தம். உடன வெளிக்கிட்டு வாங்க என்று சொன்னத நம்பித்தான் வந்தனாங்க. வந்து மத்ரஷா ஸ்கூல்ல இருந்தம். ஒன்னுமே நடக்கல.1990ல் யாழ்ப்பாணத்தில இருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்துக்கு அகதியாப் போனம். இப்ப அங்கயிருந்து அதே அகதியா இங்க வந்திருக்கிறம். புத்தளத்துலயும் எங்களுக்குச் சொந்த நிலம் இல்ல. இங்க இருக்கிறவங்க கணவன் இல்லாமத்தான் இருக்கிறாங்க. அதால குடும்பத் தலைவிங்கதான் உழைக்க வேணும். என் குடும்பத்த காப்பாத்த என்னால உழைக்க முடியாத அளவிற்கு எனக்கு நெஞ்சில வருத்தம். இதுவரைக்கும் ஒரு நிவாரண உதவியும் எங்களுக்கு கிடைக்கல. பாக்கிஸ்தான்ல இருந்தெல்லாம் வந்தாங்க. இந்துக் குருக்கள் வந்தாரு. கிறிஸ்தவ மதகுரு வந்தாரு. பௌத்த பிக்கு வந்தாரு. யாரும் ஒன்னுமே பண்ணல. பு.யு அம்மா வந்தாங்க. நம்ம கஸ்டங்கள சொன்னம். அதுக்குப்பிறகு முத்திரை தந்தாங்க. சுபையா சேர்தான் கழிப்பிட வசதியும் குடிதண்ணி வசதியும் செஞ்சி தந்தாரு” என்ற அவரது கண்களில் கண்ணிர் வடிந்தது.


மேலும் தொடர்ந்தார் “இத்தனை காலமும் கொட்டிலா இருந்தாலும் மரியாதையா வாழ்ந்தம். இப்ப பாதுகாப்பில்லாத படுக்கையறையால நிம்மதியாத் தூங்கக்கூட முடியல.பிள்ளைக்கு ஒன்பது வயது. ஒஸ்மானியாக் கல்லூரில படிக்கிறான். உம்மாதான் கடல்ல மட்டி பிடித்து ஒழைக்கிறாங்க.வயதான காலத்துல நான்தான் அவங்கள கவனிக்கனும். ஆனா இந்த வயதிலும் உம்மா ஒழைச்சு எங்கள கவனிக்க வேண்டியிருக்கு” என்று சேலைத்தலைப்பால் கண்ணிரைத் துடைத்தார்.  
வுலி, வேதனை, துன்பம், இழப்பு, கண்ணீர் போன்றவற்றுடனேயே அவர்கள் வாழ்க்கை கழிவதைப் பார்க்கும் போது மனம் வேதனையால் துடித்தது.  


“நான் வந்து ஏழு மாதமாச்சு. புத்தளத்துல இருந்துதான் வந்தனான். இங்க மக கூட இருக்கிறன். கணவரை இழந்துட்டன். வருமானம் இல்ல. ஏதாவது கூலி வேலை செய்து வாழ்ந்திட்டிருக்கன்.எல்லாரும் வாறாங்க. போறாங்க. போட்டோ பிடிக்கத்தான் வருவானுங்க. ஒன்னும் தரமாட்டாங்க. நாங்க பெரிசா ஒன்னும் கேட்கல. எங்கட குடும்பத்த பாதுகாக்க ஒரு வீடு வருமானத்துக்கு ஒரு தொழில். அவ்வளவும்தான் கேட்டம். இனியும் கிடைக்குமென்ற நம்பிக்கை இல்ல. எப்போதாவது எழுப்பிப் போடுவாற்களோன்னு பயமா இருக்கு என்று கூறினார் ஷாஹீமா. 

இத்தகைய அவல நிலைகளிற்கு முன்னேற்பாடுகளற்ற மீள்குடியேற்றம் வளப்பற்றாக்குறை குடியடர்த்தி கூடிய பிரதேச வாழ்வு அதிகரித்த குடிசனப்பெருக்கம் யுத்தத்திலான இழப்புக்கள் போன்றவற்றைக் காரணம் காட்டுகின்றார் இப்பகுதிக்கான கிராம சேவகர் க.செல்வகுமார்.


முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர் என்று கூறுவோருக்கு இந்த முகாம் மக்கள் கண்ணிற்குத் தெரியவில்லையா? இருப்பது ஒரு குடும்பமானாலும் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறிருக்கையில் இம்மக்களின் வாழ்விடத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமது அகதி வாழ்வுக்கு ஒர விமோசனம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்ரஷா முகாம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கவெண்டும். அரசில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இம்மக்களுடைய பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வழிவகைகளைச் செய்யவேண்டும்.



நன்றி: இருக்கிறம்

ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெறும் விதம் குறித்து கவலை

கிழக்கு மாகாண செய்தியாளர்:
ஆசிரியர்களது இடமாற்றம் சம்பந்தமாக அண்மைக்காலம் வரை பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை வலயங்களிலுள்ள பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு கடந்தகாலங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எதிர்வரும் ஆண்டுக்கான ஆசிரியர்களைச் சமப்படுத்தல் வேலைகள் கல்வி வலயங்கள் தோறும் நடைபெற்று வருவதாகத் தெரியவருகிறது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் தாங்கள் கற்பித்த பாடசாலைகளின் தரத்திற்கும் மற்றும் வசதிக்கேற்பவும் புள்ளிகளின் அடிப்படையில் இடமாற்றங்கள் நடைபெறுவதற்கான புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது. 


இதற்கிடையில் சில பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் வயதானவர்களாகக் காணப்படுகின்றனர்.  இவர்கள் வசதியான பாடசாலைகளில் நீண்டகாலம் சேவையாற்றி வருகின்றனர். இவர்களை நிச்சயமாக இடமாற்றியே ஆகவேண்டும். இந்த வயதான காலத்தில் இடமாறிச் சென்று அல்லது தூரப்பிரதேசத்திற்குச் சென்று எவ்வாறு சரியான கற்றல் கற்பித்தலை மேற்கொள் முடியும்? எனவும் சில முதிர்ந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர். எது எப்படியிருப்பினும் இடமாற்றம் என்பது கட்டாயம் நடைபெற்றே ஆகவேண்டும். இனிவரும் காலங்களில் புதிதாக கல்விப்புலத்தில் இணையும் ஆசிரியர்களை குறிப்பிட்ட காலப்பகுயில் தூரப்பிரதேசங்களுக்கு நியமனம் செய்கின்றபோது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட இடமிருக்காது என மூத்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். 


அதேவேளை, புதிதாக நியமனம் கிடைத்தவுடன் அரசியல்வாதிகளின் துணையுடன் தனது சொந்த வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும் உண்டு. சில ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றபோது பின்தங்கிய பாடசாலைகளுக்கே விரும்பிச் செல்கின்ற நிலையும் காணப்படுகிறது. இதற்கான காரணம் பின்தங்கிய பாடசாலைகளுக்கான விசேட கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் நோக்குடனே செல்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக பின்தங்கிய பிரதேசத்தினை வசிப்பிடமாகக் கொண்ட ஆசிரியர்கள் அங்குள்ள பாடசாலைகளில் கற்பித்துவிட்டு விசேட கொடுப்பனவை பெறுகின்ற ஒருநிலையும் காணப்படுகிறது. 


அதேவேளை இவ்வாறான ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்கின்றபோது பின்தங்கிய பிரதேச விசேட கொடுப்பனவு வழங்கப்படுகின்ற பாடசாலைகளுக்கே செல்வதில் ஆர்வமுள்ளவராகவும் காணப்படுகின்றனர். ஏதிர்காலத்தில் அமையவுள்ள இடமாற்றங்களின் போது இந்த விடயங்களையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மாகாண அமைச்சு மட்டத்தில் நடவடிக்ககை எடுப்பது நல்லது. எனவேதான் அனைத்து ஆசிரியர்களும், அனைத்துப் பிரதேச பாடசாலைகளிலும் தமது கற்பித்தலை மேற்கொள்ள சித்தமாய் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டுமென பெற்றோர்கள் தெரிவிக்கின்றர். 

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம்


முதன்முதலாக அமையவுள்ள இலங்கையின் தொழில்நுட்ப பூங்காவனம் அம்பாந்தோட்டையில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அமையப் பெருகின்ற பாரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்குள் இரண்டு பல்கலைக்கழங்களில் சுமார் 5000 மாணவர்கள் கல்வி பயில்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படவிருக்கின்றது. சிங்கப்பூர், மற்றும் இந்திய நிறுவனங்களின் ஒத்துழைப்பும், இ.ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும் என்று இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. 


அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ அவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்தப் பூங்கா அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்பூங்காவில் தகவல் தொழில்நுட்ப வணிக செயற்பாடுகளை வெளியகப்படுத்துதல் தொழில்களை இலகுவாகக் கொண்ட சில நிறுவனங்களும் இங்கு அமைக்கப்படுவதுடன், கணினிகளின் பாகங்களைக் கொண்டு புதிய கணினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றும் அமையப்பொறுவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

இவ்வாறான திட்டங்கள் எதிர்காலத்தில் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் அமையுமாக இருந்தால் யுத்தத்தால் நிலைகுலைந்போன இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் வெளியுலகத்தினை சரியான புரிந்துணர்வோடு நடந்து எதிர்கால புத்திஜீவிகளாக உருமாற்றம் பெற உதவும் அல்லவா?  

புதன், 24 ஆகஸ்ட், 2011

வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது


கிழக்கில் நடமாடிவந்த கிறீஸ் மனிதன் தற்போது வடக்கிலும் பிரசன்னமாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றான். இதனால் பீதியில் உறைந்துபோயிருக்கம் மக்களில் சிலர் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இன்னும் சிலர் வெளியில் வருவதற்கே அஞ்சுகின்றனர். வவுனியாவில் கிறீஸ் மனிதனின் பீதி கிளம்பியுள்ளதால் தற்போது பொலிஸார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஒரு இடத்தில் இருவருக்குமேல் கூடிநின்று பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர்.


கிறீஸ் மனிதன் என்ற பெயரில் அச்சுறுத்தி வருபவர்களைக் கண்டறிய பொலிஸார் இது சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களையும விநியோகித்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவி்த்தார். வவுனியா மின்சார சபை ஒழுங்கையில் வைத்து இவ்வாறு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஒழுங்கையில் காதல் ஜோடிகள் சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது.

கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு)

1971: இராணுவத்தில் இருந்த போது...

1973: தனது பதவியை இராஜினா செய்துவந்தபோது...

1973: திரிபோலி வெளியில் தொழுகையில்...

1973: பாரிஸில் செய்தியாளர் மாநாட்டில்

1977: கியூபா ஜனாதிபதி பிடஸ் காஸ்ட்ரோவுடன்...

1978: அரபு லீக் மாநாட்டுக்கு வருகை தந்தபோது...

1981: பெண்கள் இராணுவப்பிரிவைப் பார்வையிட்டபோது...

1987: திரிப்போலியில் லிபியாவின் 18 ஆண்டு விழாவில்...

1987: லிபியாவின் 18ஆவது ஆண்டுவிழாவி்ல் உரையாற்றும்போது...

1990: அல்ஜீரிய மாநாட்டுக்கு வருகைதந்தபோது...

1992: யசீர் அரபாத்தை வைத்தியசாலையில் நலம் விசாரித்தபோது...

2001: லக்மன் ஹாலிபா பாஹிமுடன்

2004: டொனி பிளேயருடன் பேச்சுவார்த்தையில்...

2009; இத்தாலியப் பிரதமர் பிர்லஸ்கோனியுடன்...

2009: பெண்‌களுக்கு ஓட்டோகிராப் வழங்கும்போது...

2009: இத்தாலியில் ஜி-8 உச்சிமாநாட்டில்...

2009: இராணுவத்தின் 42ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில்...

2011: திரிப்போலியில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்ததின நிகழ்வில்...

22 பெப்ரவரி 2011: கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடி ஆட்சியை நிலைநிறுத்துவேன் என்று அறிவித்தபோது...

12 ஜூன் 2011: ரீ.வி. நிகழ்ச்சிக்கான பேட்டியில்...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites