அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

21 நாட்களுக்குள் அகிம்சைப் போராட்டம் - பட்டதாரிகள்


எஸ்.எம்.எம்.றம்ஸான்

சனிக்கிழமை (2011.08.27) அன்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் அகில இலங்கை பொது ஊழியர் முன்னணியும் தொழில்ரீதியாக தகுதிவாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாப் பட்டதாரிகளின் தொழிற்சங்கமும் இணைந்து நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள்.


வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைகளுக்கான தீர்வு:

01. நாடு பூராகவும் வேலையற்றிருக்கம் பட்டதாரிகளுக்கு அவர்களின் கஷ்டநிலையினை கருத்தில் கொண்டு துரிதமாக நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

02. 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐந்தாறு வருடங்களாக வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் பெற்றோரில் தங்கி வாழ்கின்றார்கள். இதனைக் கருத்திற் கொண்டு 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தைப் போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

03. விஷேடமாக வடகிழக்கிலுள்ள பட்டதாரிகள் பல இன்னல்களுக்கு மத்தியில் மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். ஆகையால் வடகிழக்கிலுள்ள பட்டதாரிகளின் நியமனத்தை முன்னுரிமைப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள ஆவணைசெய்ய வேண்டுமம்.

04. வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் தொடர்பாக ஏனைய மாகாணங்களில் நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதைப் போன்று கிழக்கு மாகாண சபையிலும் வடக்கு அரச நிர்வாகத்தினாலும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள பணிப்புரை செய்ய வேண்டும்.

05. மக்கள் சபைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2 வருடங்களை எட்டி நிற்கின்றது அதுமாத்திரமன்றி இரண்டு முறை நேர்முகப் பரீட்சைக்காக அனுப்பட்ட கடிதங்கள் இடைநிறுத்தப்பட்டமையினால் பட்டதாரிகள் மனவேதனையடைந்து காணப்படுகின்றார்கள்.


06. பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் பொழுது அரச வயதெல்லையான 45 வயதை கட்டாயமாக கருத்தில் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

07. ஒழங்கமைக்கப்பட்ட அடிப்படையில் நியமனம் வழங்ககுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டடிப்படையில் நியமனம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டம்.

08. 2005ஆம் ஆண்டு கௌரவ ஜனாதிபதி அவர்கள் பிரதமராக இருக்கும் போது நேர்முகப் பரீட்சை மூலம் நியமனம் வழங்கப்பட்டன. அதே வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.

09. அதுமாத்திரமன்றி பட்டதாரிகளுக்கு பரீட்சைகளை நடாத்தி காலம் கடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. வடகிழக்கிலுள்ள ஊனமுற்ற பாதிப்படைந்த 45 வயதை தாண்டும் வயதுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

11. அகதி முகாம்களில் மாத்திரமன்றி விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற வடகிழக்கிலுள்ள பட்டதாரிகளுக்கு உரிய நடவடிக்கைகளின் மூலம் நிவாரணம் வழங்குதல் வேண்டும்.

12. கிழக்கு மாகாணத்திற்கும் வடமாகாண நிர்வாகத்திற்கும் பட்டதாரிகள் தொடர்பாக உடன் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரமளிக்கப்ட வேண்டும்.

13. வடகிழக்கிலுள்ள நிர்வாக வெற்றிடங்களை பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

14. வருடந்தோறும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் உயர்கல்வி நிறுவனங்களிலிருந்தும் வெளியாகும் பட்டதாரிகளுக்கு வருடாவருடம் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பது போன்று கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.


15. துறைசார்ந்த தொழிநுட்பவியல் பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கும் துரித முறைமையொன்று பின்பற்றப்படல் வேண்டும்.

16. திட்டமிட்டவாறு 15000 பட்டதாரிகளுக்கு உடன் விண்ணப்பம் கோரப்பட வேண்டும்.

17. ஜனாதிபதியினால் வடகிழக்கு மாகாண சபைக்கு இருக்கும் வெற்றிடங்கள் உடன் நிரப்புவதற்கு பரிந்துரைகள் செய்யப்பட வேண்டும்.

18. இன்றைய தினத்தில் (27.8.2011)  இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் கோரப்படாவிட்டால் அகிம்சை போராட்டம் ஆரம்பமாகும்.

19. நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு சேவை குறிப்பை துரிதமாக வெளியிடுதல் வேண்டும்.

20. பட்டதாரிகளுக்கு தனியான சேவைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

21. கௌரவ ஜனாதிபதி அவர்கள் பட்டதாரிகளுக்கான விபரக் கோவை கோரியது கோட்டாக்களாக மாறிவிடுகின்றது. உடன் நிறுத்தப்படு விண்ணப்பம் கோரப்பட வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites