அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இன்று கிண்ணஸ் உலக சாதனையொன்று நிலைநாட்டப்பட்டது

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்டனப் பேரணி

கிழக்கு மாகாணத்தில்‌ கிறீஸ் மனிதனைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்தும் பெண்கள்

கிழக்கு மாகாணசபையால் நடாத்தப்படும் நடுக்கடலுக்குள் சொகுசுப் பயணம் East Expo-2011

கவனிப்பாரற்ற நிலையில் வாழும் யாழ்ப்பாணம் மத்ரஷா வாழ் அகதிமுகாம் மக்கள்

புதன், 28 செப்டம்பர், 2011

3 கார்களைத் தாண்டி நீளம் பாய்ந்து சாதனை



நீளம் பாய்தல் போட்டியில் சம்பியனான ஜே.ஜே. ஜெகெட் விசேடமாக வடிவமைக்கப்பட்ட பாதையில் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். சமாந்தரமாக 3 கார்களை நிறுத்திவிட்டு அதற்கு மேல் போடப்பட்டுள்ள பாலத்தினை தாண்டி நீளம் பாய்ந்தள்ளதால் இந்த புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

நான் எப்போதும் வேடிக்கையான வழியிலேயே திறமைகளை நிரூபிக்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையிலேயே நான் இவ்வாறு 20 நீளத்தை 3 கார்களை வைத்துக்கொண்டு தாவினேன் என்று ஜே.ஜே. ஜெகெட் அங்கு தெரிவித்தார்.

ஜே.ஜே. ஜெகெட் தற்போதைய இங்கிலாந்து அதிக நீளம் பாயும் சம்பியனாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவரது சம்பியன்சிப் நீளமாக 8.04 மீற்றர் (26 அடி) உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




அதிகநாள் வாழும் இரட்டைத்தலை பூனை



அண்மையில இரட்டைத்தலை பூனை ஒன்று தனது 12ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. இதன் பெயர் Frankenlouie. இதுவே தற்போது உலகில் வித்தியாசமான பிறப்புடன் அதிகநாள் உயிர்வாழ்ந்த பூனையாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பூனைக்கு 3 கண்கள், 2 வாய் மற்றும் 2 மூக்குகள் உள்ளன. இவை பிறவியிலேயே இவ்வாறுதான் இருந்துள்ளது.
இது இரண்டு பூனைகள் அல்ல. ஒரு பூனையில் இரட்டைத் தலையில் ஒரு மூளை மட்டுமே இதன் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. 2 கண்களும் சாதரணமாக செயற்படுகின்றன. மூன்றாவது கண் மத்தியில் இருப்பது செயலிழந்து காணப்படுகி்ன்றது.


அதன் உரிமையாளர் மார்ட்டியுடன் இத வாழ்ந்து வருகின்றது. இந்தப் பூனைகூட "அதிகநாள் உயிர் வாழ்ந்த அசாதரண பூனையாக" தற்போது கின்னஸில் பதிவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


உயிருடன் இருந்த தாயை சவக்கிடங்குக்கு அனுப்பினர்


பிரேசில் நாட்டில் ஒரு மருத்துவ தாதியும் வைத்தியர் ஒருவரும் இறந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் Rosa Celestrino de Assis எனப்படும் பெண்ணை சவச்சாலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள். இப்பெண் நியுமோனியாவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அப்பெண் சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டாள்.
ஆனால், அவர்ருடைய AFP அறிக்கையில் இறந்ததாக குறிப்பிடப்படவில்லை.  அசோசியேட்டட் பிரஸ் செய்தியின்படி, அவரது மகள்மாரான Rosangela Celestrino, Celestrino de Assis இருவரும் கடைசி நேரத்தில் தனது தாயைப் பார்த்துவிட்டுச் சென்றதாக பிரேசில் பத்திரிகை ஒன்றுக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


இதேவேளை, Rosa Celestrino ஏற்கனவே சவக்கிடங்கிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் இருந்தபோதுதான் மகள்மார் பார்த்தாக சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ். நியூஸ் அறிக்கையின்படி ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்திருந்து 2 மணி நேரத்தின் பின்னரே சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
 Rosa Celestrino de Assis இன் மகள்
ஏ.பி.சி. நியூஸ் இன்படி, Celestrino de Assis இறந்துவிட்டதாக அறிவித்த வைத்தியர் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டார். ஆரம்பத்தில் முக்கிய அறிகுறிகள் ஏதும் தென்படுகிறதா என சோதிக்காமையால் அந்த மருத்துவ தாதியும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உயிருடன் இருப்பவரை சவக்கிடங்குக்கு அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. இந்த வருடம் ஜூலையில், தென்னாபிரிக்காவில் இதேபோன்று சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தார். அம்மனிதன் 21 மணிநேரத்தின் பின்னர் தன்னைப் பூட்டிவைத்திருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து எழுந்துள்ளார். சவக்கிடங்கில் பணிபுரியும் தொழிலாளர்கள் பேய் என்று கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

உலகில் மிகப்பெரிய "நாண் ரொட்டி"


உலகில் மிகப்பெரிய நாண் ரொட்டியை சீனாவின் ஒரு உள்ளூர்ப் பகுதியில் தயாரித்துள்ளார்கள். இதனை 6 மீற்றர் அகலம் கொண்ட அடுப்பில் சுட்டுள்ளனர்.

இது மிகவும் துல்லியமான முறையில் கட்டப்பட்ட அடுப்பிலேயே சுடப்பட்டது. இந்த நாண் ரொட்டியின் விட்டம் 2.75 மீற்றராகும். இதில் அடங்கியுள்ள 30 கிலோ ஆட்டிறைச்சியும், 125 கிலோ மாவும், 16 கிலோ வெங்காயமும் 90 கிலோ தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது.

நாண் ரொட்டி சுடுவதில் நன்கு பயிற்சிபெற்ற 12 உள்ளூர் தொழிலாளர்கள் இதனைச் செய்து முடித்துள்ளனர். இதனைச் தயாரிக்க 10 மணித்தியாலங்கள் எடுத்தது.


உலகில் மிகச்சிறிய டிஜிட்டல் கமெரா


உலகில் மிகச் சிறிய கமெரா விரல் நுனியளவு மிகவும் சிறியதாக உருவாக்கப்பட்டள்ளது. இதனால் 2 மெகா பிக்ஸல் அளவுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கமுடியும். இது 1 அங்குலம் அளவுடையது. இதன் எடை அரை அவுன்ஸ் மட்டுமே. விலை £ 65. இதனைப் பயன்படுத்த சில்லறை விற்பனையாளர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.

பேச்சாளர் ஒருவர் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது; மனித விரலினால் கமெராவின் ஷட்டர் பொத்தானை ஒரு தடவை தொடுவதன் மூலம் ஒரு புகைப்படத்தை எடுக்கமுடியும். உலகின் மிகச்சிறிய கமெரா ஒரு பளிங்கைவிட சற்று பெரியது என்றாலும், அதன் படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் மிகப்பெரிய கமெராக்களில் எடுப்பது போலத் தோன்றுகிறது.


இதன் பிளஸ் தன்னியக்கமுடையது.  இதன் புகைப்படங்கள் 640 x 480 பிக்ஸல் (Resolution) உடையது. இதன் வீடியோ ஒரு செக்கனுக்கு 30 பிரேம்கள் கொண்டது. 1600 x 1200 அளவுடைய AVI வீடியோக்களையும் இதனால் பதிவுசெய்ய முடியும். இதனால் பிடிக்கப்படும் JPEG புகைப்படங்கள் 2 MP அளவுடையது. இதில் 2 GB அளவுடைய மெமரி கார்டைப் பொருத்தி அதில் புகைப்படங்களையும, வீடியோக்களையும் சேமிக்க முடியும். இதன் ரீசார்ஜ் பெற்றி 30 நிமிடங்கள் வரை செயற்படக்கூடியது.

வாஷிங்டன் நினைவு சின்னத்தினுள் பூகம்பம்


வாஷிங்டனிலுள்ள நினைவுச் சின்னத்தினுள் திங்கட்கிழமை பிற்பகல் பாரியளவிலான ஒலி எழும்பியுள்ளது. தேசிய பூங்கா சேவைப் பகுதியில் ஓகஸ்ட் 23 இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு்ள்ளது. 5.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்தப் பூமி அதிர்ச்சியின்போது நினைவுச்சின்னம் உள்ளே இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

தானியங்கி பாதுகாப்பு கமெராக்கள் மூலமாக இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன, இங்கு பார்வையிட வந்தவர்கள் மாடிப்படியிலிருந்து சறுக்கி விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த நினைவுச் சின்னம் தற்போது மூடப்பட்டு புனரமைப்புச் செய்யப்படுகின்றது.




திங்கள், 26 செப்டம்பர், 2011

உருளைக்கிழக்கு திருடனை தீயிலிட்டு எரித்தனர் (Video)


கென்யா நாட்டில் இரண்டு மூட்டை உருளைக்கிழங்கை திருடியவர்களை கை, கால்களை கட்டி கல்லால் அடித்து காயங்களை ஏற்படுத்திய பின்னர் அவர்கள் மீது பெற்ரோல் ஊற்றி உயிரோடு எரித்திருக்கிறார்கள். இது ஒரு மனிதநேயமற்ற மிருகவெறிச் செயல். வயிற்றுப் பசிக்காகத் திருடும் இந்த மாதிரியான ஆட்களை இவ்வாறு பகிரங்கமாக தீயில் இட்டுக் கொல்வது கண்டிக்கத்தக்க செயலாகும்.

எச்சரிக்கை: மென் மனம் கொண்டவர்கள், பெண்கள் தயவுசெய்து இதனைப் பார்க்கவேண்டாம்.


 இந்த கொடுமையை நீங்களும்தான் பாருங்களேன்.



ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

உலகிலுள்ள மிதக்கும் ஹோட்டல்கள்

உலகில் மனிதன் எதையெல்லாம் அனுபவிக்க முடியுமோ அதையெல்லாம் அனுபவிக்கிறான். அதாவது இந்த உலகத்திலே சொர்க்கத்தை ஏற்படுத்து ஆசைப்படுகிறான். அதற்காக பணத்தை தண்ணீராய் இறைக்கிறான். அந்த வகையில் கட்டப்பட்டதுதான இதுவும். உலகிலுள்ள அனைத்து மிதக்கும் ஹோட்டல்களில் தொகுப்பே இது. இதில் அனேகமான ஹோட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாமும் இங்குபோய் தங்கலாம். உங்களது ஒரு வருட உழைப்பை ஒரு நாளைக்க செலவழிக்கத் தயாரா?





































Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites