அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இன்று கிண்ணஸ் உலக சாதனையொன்று நிலைநாட்டப்பட்டது

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்டனப் பேரணி

கிழக்கு மாகாணத்தில்‌ கிறீஸ் மனிதனைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்தும் பெண்கள்

கிழக்கு மாகாணசபையால் நடாத்தப்படும் நடுக்கடலுக்குள் சொகுசுப் பயணம் East Expo-2011

கவனிப்பாரற்ற நிலையில் வாழும் யாழ்ப்பாணம் மத்ரஷா வாழ் அகதிமுகாம் மக்கள்

ஞாயிறு, 31 ஜூலை, 2011

இணைய வானொலிகளின் மோசடி


'வசூல்' ராஜாக்களாகும் இணையத்தள வானொலிகள்
'நீங்களும் அறிவிப்பாளராகலாம்', நேரடியாக எமது கலையகத்தில் பணியாற்றலாம்', 'பிரபல ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு| இப்படிப் பலவாறான விளம்பரங்களை அன்றாடம் பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள். சிலர் வரிந்து கட்டிக்கொண்டு விண்ணப்பங்களை நிரப்பிப் போட்டுமிருப்பீர்கள். சிலர் அதற்கும் ஒரு படி மேலே போய் கையில் இருப்பதை விற்றுப் பணமாக்கி அவர்கள் கேட்கும் தொகையை அனுப்பிவிட்டு ஏமாந்த சோனகிரிகளாக இருப்பீர்கள்.


அவ்வாறு ஓடி ஏமாற்றமடைந்தவர்கள் பட்டியலில் என்னையும் இணைத்துக்கொள்ளலாம். நானும் இவ்வாறு பத்திரிகை விளம்பரமொன்றைப் பார்த்துவிட்டு ஒரு இணைய வானொலிக்கு நேர்முகத் தேர்விற்குச் சென்றேன். குரலைப் பரீட்சித்துவிட்டு ஷநீங்கள் இந்த வானொலியில் பணியாற்றலாம். ஆனால், இதற்கான பயிற்சிநெறிக்காக நீங்கள் 10 ஆயிரம் ரூபா கட்ட வேண்டும்| என்று கேட்டனர். ஆர்வக்கோளாறு காரணமாக நானும் கட்டணத்தை செலுத்தி இணைந்துகொண்டேன். விடுமுறை நாட்களில் வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களால் ஊடகவியல் தொடர்பான சில வகுப்புகள் நடத்தப்பட்டன.


அறிவிப்பாளராக பணிபுரியலாம் என்று அறிவித்து விட்டு இப்படி பயிற்சி நெறியை மட்டும் நடத்துகிறீர்களே என்று நான் கேட்டபோது பயிற்சிநெறியை நடத்தியவர் கூறினார் 'தம்பி பயிற்சிநெறி முடிவடைந்ததும் திறமையானவர்களை (ரொம்பவும் ஆர்வக் கோளாறு உள்ளவர்களை) நாங்கள் அறிவிப்பாளர்களாக இணைத்துக்கொள்வோம்' என்று. நான் அப்படிக் கேட்டதாலோ என்னவோ ஒருவாறு அறிவிப்பாளராக மூன்று மாதங்கள் இரவு, பகல் பாராது ஐந்து சதம்கூட சம்பளம் இல்லாமல் வேலை செய்தேன். அந்த வானொலியில் பிரதான முகாமையாளராம் அவர். அறையை விட்டு வெளியே வரமாட்டார். அவரிடம் போய் கேட்டபோது இப்போது சம்பளம் இல்லாமல் வேலைசெய்ய யூனிவர்சிற்றில, மற்றும் ஊடகத்தில் ஆர்வமுள்ளவர்கள் பலர் முன்வருகின்றனர். அப்போ, நாங்கள் சம்பளம் கொடுத்து அறிவிப்பாளர்களை வைக்கவேண்டிய தேவையில்லையே| என்றாரே பாருங்கள். 10,000 காசை என்னிடமிருந்து கைநீட்டி வாங்கும் போது அத்தனைப் பற்களையும் காட்டி இளித்தவர் அன்று என்னிடம் கடுகடுத்தார். என்னசெய்ய அவர்களிடம் வாதாடி நடக்கப்போவது ஒன்றுமில்லை என்று அறிந்துகொண்ட நான் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

அறிவிப்பாளர் ஆகவேண்டுமாயின் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம் என்ற நம் ஆர்வக்கோளாரை நன்கு அறிந்துகொண்ட இவ்வாறான நிறுவனங்கள் அதைப் பயன்படுத்தி நன்றாகவே பணம் உழைக்க ஆரம்பித்துவிட்டனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இவ்வாறான விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். அங்குள்ள என் நண்பர் ஷஅவங்க வேலைக்கு எண்டு பேப்பர்ல கோல் பண்ணிட்டு, இன்டர்வியூவுக்குப் போனதும் கோர்ஸ் எண்டு சொல்றாங்க. கோர்ஸ் எண்டா ஆரும் அப்ளை பண்ண மாட்டாங்க. நானும் போயிருக்கவே மாட்டன். பொறகு 10 ஆயிரத்த வாங்கிட்டு ஒழுங்கா கிளாஸும் வெக்கிறதில்லை. சும்மா ஆசை காட்டி இப்படி எமாத்துறாங்க. பொறகு நாங்க உங்களுக்கு அந்த றேடியோவுக்கு, இந்த றேடியோவுக்கு வேலை எடுத்து தருவம் எண்டு பொய்யச் சொல்லி ஏமாத்திட்டாங்க. இதை உங்க பேப்பர்ல போட்டா புண்ணியமா போவும். எத்தனையோ பேர் இப்படி ஏமாறுறாங்க' என்றார் அழாக்குறையோடு...


இருந்தும் பல இளவட்டங்கள் அறிவிப்பாளராகும் எண்ணத்தில் அவ்வாறான நிறுவனங்களில் நாளுக்கு நாள் படித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். பிரபல ஊடகங்களில் பணியாற்றுபவர்களை சுட்டிக்காட்டி அவர்களுக்கு தாங்கள்தான் வேலை எடுத்துக்கொடுத்தோம் என்று பீற்றிக்கொள்கின்றார்கள். ஆனால் தேடிப் பார்க்கையில் அங்கே அப்படி ஒரு மண்ணும் இல்லை என்று என் ஒலிபரப்புத்துறை நண்பர் ஒருவர் கூறக் கேட்டேன். 'எங்கட முயற்சியாலதான் நாங்க வேலக்கி வந்தம். அவங்கட ரெகமண்ட் எல்லாம் இங்க எடுபடாது. ஒரு சேர்ட்;டிபிக்கேட்ட கையில் குடுத்து கைகழுவிட்டாங்க. இப்ப எங்களக் காட்டி பொழப்பு நடத்துறாங்க| என்று ஆதங்கப்பட்டார்.

சுற்றிச் சுற்றிப் பார்க்கும்போது நிறைய பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எனது நண்பி ஒருவரும் இவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கின்றார். 'சூப்பர் ஸ்டார்| இன் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்ட ஒருவர் தனக்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 12 ஆயிரத்துக்கு ஷஆட்டையைப்| போட்டதாகத் தெரிவித்தார். அந்த மோசடிப் பேர்வழி வீட்டுக்கே வந்து நண்பியின் பெற்றொரின் முன்னிலையில் பணத்தை பவ்வியமாக பெற்று அதுக்கு ஒரு ரசீதும் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். பிறகு அவரை தொடர்புகொள்ளமுடியாமலேயே போய்விட்டதாம். கொடுத்த பற்றுச்சீடடை வைத்து குறிப்பிட்ட இடத்துக்கு போய் பார்க்க அந்த இடமும் காலிசெய்யப்பட்டிருக்கின்றது.


இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஒரு இணையத்தள வானொலியொன்று தனது கிளையை நிறுவி, ஒரு பண்டிகை தினத்தன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 96.1 (நடமாடும்) அலைவரிசையை எடுத்து இரு தினங்களுக்கு நிகழ்ச்சிகளை நடாத்தி கொள்ளை இலாபம் சம்பாதித்திருக்கின்றது. அந்த இணையத்தள வானொலியில் பயிற்சிக்காக வந்தவர்களிடம் விளம்பரங்களை சேகரித்துவருமாறு பணித்தனர். அதில் ஒரு சில யுவதிகள் தங்களால் விளம்பரம் எடுக்க முடியாமல் தங்களது சொந்தப் பணத்தைக் கொடுத்ததாகவும் அங்கு பயிற்சிபெற்ற பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நபர் தெரிவித்தார்.

இணையத்தள வானொலிகள் சில ஷவேலை தருகிறோம்| என்று விளம்பரம் செய்துவிட்டு ஷகோர்ஸ்| என்று அடிப்படையில் இளைஞர்களின் எதிர்காலத்தையும் பணத்தையும் வீணடித்து வருகின்றன. இது தொடர்பாக ஷவாரணம் எப்.எம். முகாமைத்துவப் பணிப்பாளர் குணசீலனுடன் நான் தொடர்புகொண்டு கேட்டபோதுளூ ஷநாங்க அப்படியெல்லாம் பேப்பர்ல விளம்பரம் போடுறதுல்ல. ஆனா, நெறயப் பேருக்கு வேல எடுத்துக் குடுத்திருக்கம். திறைமயானவங்க எங்களிட்ட இருந்தா நாங்க கட்டாயம் அடையாளப்படுத்துவோம்| அப்படி எங்களது முயற்சியால் சிலருக்கு பிரபல ஊடக நிறுனவங்களில் வேலை எடுத்துக் கொடுத்திருக்கிறம்' என்று பட்டியலிட்டுக் காட்டினார். இன்று எல்லா வானொலிகளுமே வர்த்தக நோக்கத்தை மையமாக வைத்தே இயங்குகின்றன. அதற்குள் நடக்கும் குத்து வெட்டுக்கள் பற்றி பேசவேண்டாமே... பிறகு ஊடக நாகரிகத்தை நாங்கள் மீறிவிட்டதாகவேறு குற்றஞ்சாட்டுவார்கள்.


இந்த இணையத்தள வானொலிகள் பற்றி நாம் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்கள் 'சிலோன் தமிழ நாங்க காது குளிரக் கேட்கணும்| என்று சொல்லி இணையத்தள வானொலிகளை ஆரம்பிப்பதற்கான சகல வசதிகளையும் செய்துகொடுத்தனர். ஆனால் இதுவே இன்று பணம் கறக்கும் ஒரு உத்தியாக மாறிவிட்டது.
இன்று பிரபல வானொலிகளில் அறிவிப்பாளராக இருப்பவர்கள் கூட இந்த விளையாட்டைக் காட்டுகிறார்கள் என்றால் நம்புவீர்களா? அவர்களிடம்தான் இவர்கள் அதிகமாக ஏமாறுவார்கள். என் நண்பர் ஒருவர் என்னிடமே கேட்டார் 'நான் Media Course நடத்துறன.; எனக்கு ஆள் எடுத்து தா,. எனக்கு ஒரு இணையத்தள வானொலியும் இருக்கு' என்று. 'நீங்கள்தான் இன்று நல்ல வானொலியில் பெயர்பெற்ற அறிவிப்பாளராக இருக்கின்றீர்களே.. பிறகேன் இணையத்தள வானொலி' என்று... தனக்கென்று ஒன்று இருக்கவேண்டுமாம். அவர் கூறிய ஒரு விடயம் என்னை ஆட வைத்துவிட்டது. அதாவது அவர் வழங்கும் சான்றிதழில் சகல ஊடகங்களிலும் இருக்கும் மேலதிகாரிகள்; ஒரு அரசியல்வாதி என்று கையெழுத்திடுவார்களாம். ஏன் என்றேன். 'எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும். அதற்குதான். இப்படி' என்றார். விடுவார்களா நம் இளைஞர்கள்? தற்போது அவருடைய Media Courseக்கு அதிகமானோர் படையெடுப்பதாகக் கேள்விப்பட்டேன்.

இது தொடர்பாக சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது...
'இணையதளத்தின்; தமக்கு தெரிந்தவற்றைக் கொண்டு பயிற்றுவித்து அறிவிப்பாளர் வடிவத்தை பெற்றுத்தருகின்றோம் என்று கூறும் பல்வேறு தரப்பினரை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஒரு அரச வானொலியில அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற எண்ணத்திலே வருபவர்களை சிலநேரம் இதழியல் என்று சொல்வார்களே அதில் அங்கத்துவம் வகிக்கின்ற படிவத்துடன் நான் அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன். 'ஆறாயிரம் கொடுத்தோம் எண்ணாயிரம் கொடுத்தோம் வேண்டுமானவற்றை சொல்லிக்கொடுத்தார்கள். எங்களுக்கு உரிய இடங்கிடைக்கவில்லை' என்று அங்கலாய்ப்பதை நான் நேரடியாகக் கேட்டிருக்கின்றேன். அவர்களுக்கொல்லாம் ஒன்றை நான் குறிப்பிட விரும்புகின்றேன். இத்துறையிலே பண்பட்டவர்கள் உங்களுக்கு பயிற்றுவிப்பாளராக இருந்தால் இந்தத்துறையில் நீங்கள் முன்னேறிச் செல்லலாம். அதற்காக இப்போது பயிற்சியளிப்பவர்களை திறமையற்றவர்கள் என்று சொல்லவில்லை. நாம் ஒருவருக்கு பயிற்சியைக் கொடுக்கும்போது நாம் அதிலே ஆழ்ந்த சிந்தனை உடையவர்களாக மாத்திரமல்லாமல் அதிலே முழுமையாக எங்களை அர்ப்பணிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அதிலே சற்றுப் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். பணம் உழைக்கவேண்டும் என்ற எண்ணத்திலே இத்தகைய பணிகளில் ஈடுபட்டால் ஆர்வத்தோடு இத்துறைக்கு வரும் இளையதலைமுறை அறிவிப்பாளர்களுக்கு சரியான வழிகாட்டல்கள் இல்லாமல் போய்விடும். முதலில் உங்களுடைய தமிழைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அந்தத் தமிழைக் காப்பாற்றக்கூடிய பணியினை உங்களுக்கு பயிற்சி தருபவர்கள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.


இவர் கூறியதைப்போல பணத்தை மட்டும் இலக்கு வைத்து அறிவிப்பாளர் பாடம் நடத்துவோரிடம் நாம்தான் நிதானமாக இருக்கவேண்டும். அறிவிப்பாளர் ஆகியே தீரவேண்டும் என்றால் இவரைப்போல எத்தனையோ மூத்த அறிவிப்பாளர்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள் அவர்களிடம் சென்று அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு உங்கள் ஆர்வக் கோளாறுக்கு வழிதேடலாமே. தயவுசெய்து ஊடக மயக்கத்திலிருந்து வெளியே வாருங்கள்.


இல்லை. நீங்களும் இணையத்தள வானொலி ஆரம்பிக்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாறு உங்களை விட்டுப்போகாவிட்டால் இந்த http://www.youtube.com/watch?v=EDm8JkcmA84&feature=player_embedded முகவரிக்குச் சென்று எவ்வாறு இலவசமாக இணையத்தள வானொலிகள் ஆரம்பிக்கலாம் என்ற வீடியோக் காட்‌சியைப் பார்த்துவிட்டு நீங்களும் இலவசமாக ஒரு இணைத்தள வானொலிக்கு சொந்தக்காரர்களாகலாம். இதிலும் தனியாக இணைய வானொலி செய்யலாம். http://www.ustream.tv/discovery/live/all


நன்றி: இருக்கிறம்

நேர்காணல் - அரபாத், ஓவியர்


ஒரு படைப்பாளனாக நான் படைத்த பல்வேறு ஓவியங்கள் என் ஆத்ம வேதனைகளை அதிகமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.

ஓவியக் கலைஞரும் ஆசிரியருமான முஸ்தபா அரபாத்

- நேர்காணல்: முஹம்மட் பிறவ்ஸ்


உணர்ச்சிகளை அழகிய தன்மையோடு உருவாக்கி வெளிப்படுத்தும் காட்சி மொழி தான் ஓவியம். இந்த ஆற்றல் எல்லோருக்கும் அமைவதில்லை. அது இறைவன் ஒரு சிலருக்கு வழங்கியுள்ள அரும் கொடை. எந்தவொரு படைப்பையும் ஓவியமாக காட்டும்போது அதன் தாக்கமும் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அவ்வளவு ஏன்? நம்நாட்டில் நடைபெற்ற யுத்தம் அதனால் ஏற்பட்ட தாக்கங்களை நீங்கள் பத்திரிகைகளில் வாசிக்கும்போது ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கும். அதையே நீங்கள் ஓவியங்கள் மூலம் காணும்போது சற்று அதிகமாக எதையோ ஒன்றை உணர்ந்திருப்பீர்கள். அதுதான் ஓவியங்களின் வலிமை. எந்தவொரு கலையும் பிறக்கும் போது வருவதில்லை. எந்த மனிதனும் பிறவியிலே கலைஞனாப் பிறப்பதில்லை. அவனது ஆர்வமும் இடையறாப் பயிற்சியுமே அவனை கலைஞனாக மாற்றுகிறது. நவீன ஓவியர்களுள் ஓவியக் கலையை முறையாகப் பயின்று ஓவியம் தீட்டுபவர்களும் உள்ளனர்;. தாமே கற்று ஓவியம் வரைபவர்களும் உள்ளனர். மேலும் மரபு சார்ந்த ஓவியர்களும் மரபு சாரா ஓவியர்களும் உள்ளனர். அவற்றுள், தானே ஓவியம் வரைந்து கற்றுக்கொண்ட ஒரு ஓவியர்தான்; சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர் முஸ்தபா அரபாத். கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியை கற்ற இவர் அட்டாளைச் சேனை ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் ஓவியத்துறையில் விசேட பயிற்சியை முடித்துள்ளார்.


சிறுவயதுக் காலங்களில் தான் பார்த்தவற்றையும் பத்திரிகைகளில் வரும் படங்களையும் பார்த்து வரைந்து பழகியவர் இன்று சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில ஓவியக் கலை ஆசிரியராக பணியாற்றுகிறார். பல்வேறு ஓவியக் கண்காட்சிகளை நடத்திய இவரது பல சித்திரங்கள் ஜனனி மித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இருக்கிறமுக்காக இவரை அண்மையில் சந்தித்தபோது இவர் ஆசிரியரா மாணவரா என்று சற்று தடுமாறித்தான் போனேன். வயதுக்கு மீறிய அவரது படைப்புக்களைப் பார்த்து என்னால் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. ஓவியம் வரைவதற்கான ஆர்வம் ஏற்பட்டது பற்றிக் கேட்டேன்.

'சின்ன வயசில இருந்தே கலைகளில் ஆர்வம். ஓய்வு நேரங்கங்கல்ல எதையாவது வரைஞ்சுக்கிட்டு இருப்பன். எனக்கு பொழுது போக்கே எதையாவது வரைந்து கொண்டு இருக்கிறதுதான். வாப்பா இல்லாத டைமிலதான் அதிகமா வரையிறது. ஏனெண்டால் நான் படிக்கணும் எண்டு சொல்லி வரைய விடுறதில்ல. அவர் வீட்ல இல்லாத டைம்ல நான் வரையிற. பாடசாலைக்குப் போறத்துக்கு முன்ன இருந்தே வரைய தொடங்கிட்டன். நான் வரையிறதுக்கு என்னோட நண்பர்கள் தான் உறுதுணையா இருந்தாங்க. சிறுவயதில காட்டூன் வரையிறதில ஆர்வம் இருந்தது. கல்லூரி காலங்கள்ல சிரேஸ்ட மாணவர்களை காட்டூனா வரைந்து அடிவாங்கியிருக்கன்..' என்றவர் தான் வரைந்த ஓவியம் முதன் முதலாக 'அகரம்;' என்ற சஞ்சிகையில் வெளிவந்ததாக கூறி மகிழ்ந்தார்.


'சித்திரத்தில வந்து பொதுவா நாலு வகை இருக்கு. 'சத்தியம்' எண்டு சொல்றது இயற்கையானதில வரையிறது. அடுத்தது வைணிகம். அது இசைப் பண்பு நிறைந்தது. அடுத்தது நாகரம். நாகரம் எண்டு சொல்றது நாகரிகத்தை உடையதாக இருக்கும். நான்காவது நிக்கிரம். இது கலப்புடையது. தொன்மைக் காலத்தில விஷ்ணு தர்மோத்திரம் என்கிற தொன்மையான ஓவிய நூலில் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே வகைகள்தான் இப்பவும் இருக்குது' என்றார்.

உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களையும் இயற்கையைப் பிரதிபலிக்கின்ற ஓவியங்களையும்தான் இவர் விரும்பி வரைவாராம். தான் வரைந்த ஓவியங்களில் மனித மரங்கள் என்ற ஒரு சித்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார். அதிகமாக நாட்டிலும் வீட்டிலும் நடக்கும் பிரச்சினைகளை தத்ரூபமாக தன் கைவண்ணத்தில் ஓவியமாக தீட்டியிருந்த அவரது சில ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே ஓவியம் வரைவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கின்றதா என்று கேட்டேன்.
'நான் கல்விக் கல்லூரிக்கு சென்ற போது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் வரைவாங்க. அவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காணும் சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சது. சிலவங்க புள்ளிகளைப் பயன்படுத்தி வரைவாங்க. சிலர் வர்ணங்களை மிகவும் அடர்த்தியா பயன்படுத்துவாங்க. மற்றது வர்ணங்கள்ல நீர்த்தன்மையானத பயன்படுத்துவாங்க. சிலர் கோடுகளைப் பயன்படுத்தி வரைவாங்க. இப்படி எல்லாத்தையும் ஒரே இடத்தில கற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சது' என்றார் பெருமையோடு...


தனக்கு ஓவியத்தில் புதுப்புது முறைகளைப் பயிற்றுவித்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த விரிவுரையாளரும் சிற்பியுமான அல்லிராஜாவை இந்த இடத்தில் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இஸ்லாமிய மார்க்கத்தில் உயிருள்ள பொருட்களை வரைவது தடைசெய்யப்பட்டதாக இருக்கும்போது நீங்கள் எவ்வாறு இவற்றை வரைகின்றீர்கள்....
'உண்மைதான். ஓவியம் வரைவதற்கு இஸ்லாத்தில் தடையில்லை. நான் ஒரு ஆசிரியராக இருப்பதால் என் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க நான் எல்லாம் வரைய தெரிந்திருக்கத்தானே வேண்டும்.. அவ்வாறான ஓவியங்களை வரைந்து வீடுகளில் தொங்கப்போடுவதற்கு தடை உண்டுதான். அதனால் நான் அவற்றை வரைந்து எங்காவது மூடி வைத்துவிடுவேன்' என்றார் சிறிய வருத்தத்துடன்.


நம் நாட்டைப் பொறுத்தளவில் ஓவியம் வரைந்து காலத்தை ஓட்டலாமா?
'மேலை நாட்டைப் பொறுத்தவரையில் சித்திரத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கு. ஆனால் அந்தளவிற்கு நம்மட நாட்டில இல்லை. ஒவ்வொரு கலைஞரும் தான் வரைந்த ஓவியங்களை விற்பதற்கு சுதந்திரமுண்டு. கலைஞர்கள் என்றாலே வறுமைப்பட்டவர்களாத்தான் இருப்பாங்க. அது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவங்க வாழ்வின் பெரும்பாலான பகுதிகள வந்து ஓவியம் வரையிடுறதிலையே செலவிடுறதால அவங்கட குடும்ப நிலமையும் கஸ்டத்தில் இருக்கும். ஆனால் அத்தகை ஓவியங்களை வாங்குவது மிகவும் குறைவே...' என்றார்.

ஒரு கருத்துள்ள ஓவியத்தை ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்குரிய விதத்தில்புரிந்து கொள்வர். ஒரு சிலருக்கு கோடுகளாகவும் சில வண்ணச் சிதறல்களாகவும் தெரியும் அதே சித்திரம் பிறிதொருவருக்கு ஆயிரம் அர்த்தங்களைக் கொடுக்கலாம். இதுதான் சித்திரக்கலையின் சிறப்பு. இது ஒவ்வொருவின் மனநிலைக்கும் ஏற்ப மாறுபடும்.
நீங்கள் ஒரு ஓவிய ஆசிரியர் என்றவகையில் மாணவர்கள் ஓவியம் வரைவதில் ஆர்வம் செலுத்துகின்றனர? அதில் பெற்றோர்களின் பங்களிப்பு என்ன?

எந்தவொரு துறைய எடுத்துக்கொண்டாலும் அதில ஆர்வமும் அதை மதிக்கிற தன்மையும் இருக்க வேண்டும். ஆர்வமிருந்தால் செய்ய முடியாதது உலகத்தில எதுவும் இல்ல. சில பெற்றோர் என்னிடம் சித்திரம் கீறித் தருமாற வருவாங்க. நானும் கீறிக் கொடுப்பன். மறுநாள் வகுப்பில் வந்து பார்த்தால் நான் கீறின சித்திரத்தையே என்கிட்ட மாணவர்கள் தாங்கள் வரைந்ததாக காட்டுவாங்க. அதுக்கு பிறகு கீறிக் கொடுக்கிறத விட்டுட்டன். ஒவ்வொரு ஆசிரியரும் பிள்ளைகள்தாள் கீறுகிறார்கள் எண்டு நினைப்பாங்க. ஆனால் பெற்றோர்கள் மற்றாக்கள்ட கொடுத்து கீறி கொடுக்கிறதுலா எந்தப் பயனும் இல்ல. அவர்ள் கீறிப் பழக பழகத்தானே ஒரு பயிற்சியாக அமையும்?' என்றவர் சுனாமி அனர்த்தத்தின் போது தான் வரைந்த நிறைய ஓவியங்கள் அழிந்துவிட்டதாக கூறி வருந்தினார்.


யாருடைய ஓவியம் உங்களுக்குப் பிடிக்கும்?
நான் வந்து அதிகமாக வின்ஸன்ட் வான்கோ வின் ஓவியங்களைத்தான் அதிகமா விரும்புவது. இவருடைய ஓவியங்கள் மற்றவர்களுடைய ஓவியத்தை விட வித்தியாசமாக இருக்கும். உள்ளத்து உணர்வுகளை அப்படியே வெளிக்காட்டும் இந்த ஓவியங்கள் பல்வேறுபட்ட மக்களுடைய வாழ்வியல் அம்சங்களைச் சித்தரிக்கிறன.

இன்ற நம்நாட்டில் ஒவியக்கலை குறிப்பிட்ட சொல்லக்கூடிய அளவில் வளர்ச்சியடையவில்லை. இதனை ஊக்குவிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்று கேட்டபோது....
'இலங்கையில சித்திரக்கலை பயில்வதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு. சித்திரத்திற்குரிய மூலாதாரங்கள் இல்லை. இப்ப எல்லாமே செலவு அதிகரித்து போகுது. பாடசாலையில கூட வந்து எல்லாப் பிள்ளைகளாலையும் சித்திரம் கீறுவதற்கு தேவையானத பெற்றுக்கொள்வது கஸ்டமாகத் தான் இருக்குது. சித்திரத்துக்குரிய வரலாறுகூட தமிழில் வருவது குறைவு. சிங்களத்தில்தான் வந்திருக்கு. இந்தியா போன்ற நாடுகளில் அதுக்குரிய வரவேற்புகள் கூடுதலாக இருக்கு. எங்களுக்கு தேவையான பத்தகங்களைக்கூட இந்தியாவில்தான் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கு. ஆகவே நம்ம நாட்டிலயும் அதற்கான வழிவகைகளை செய்துகொடுக்க வேண்டும். அத்தோடு இப்போதைய பிள்ளைகளை சித்திரம் கீறுவதில் ஆர்வம் காட்டி தங்கள் கீறும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது நம்நாட்டிலும் வருங்காலத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம். எங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு ஏதாவது சாதிக்க முயலவேண்டும். எம்மிடம் எத்தனை கலைகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்துவதற்குரிய அங்கீகாத்தைப் பெற்றுக்கொள்ளுவதுதான் மிக அவசியம். நான் முன்பு வரைந்த ஓவியங்களுக்கு இப்ப நானொரு ஓவிய ஆசிரியரான பிறகுதான மதிப்பே கிடைச்சிருக்கு. நம்மட சமூகத்தில ஒரு பிரபல்யமான அங்கீகாரம் பெற்ற ஒருவர் ஏதாவது செய்யும் போதுதான் அதுக்கு மதிப்பு தாறாங்க. ஆகவே இன்று கலைஞனுக்கு ஒரு அங்கீகாரமும் தேவையாக இருக்கிறது' என்றார்.


உங்கள் ஓவியங்கள் எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
'பொதுவாக நான் ஓவியம் வரைவதே என் மனதை ஏதாவது அதிகமாக தாக்கும் சந்தர்ப்பங்களில்தான். அந்த நேரத்தில் ஏற்படுகின்ற உணர்வுகளை ஓவியமா வரைவதால் மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். அது என் ஒவியத்தைப் பார்க்கும் மக்களுக்கும் ஏற்படவேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. பல்வேறு பிரச்சினைகளைக் குறித்த எனது படைப்புகள் மொழி, இனம், நிறம் கடந்து பல்வேறு தரப்பையும் சிந்திக்க வைத்துள்ளன. ஒரு படைப்பாளனாக நான் படைத்த பல்வேறு ஓவியங்கள் என் ஆத்ம வேதனைகளை அதிகமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. இன்று நமக்குள் நாமே அழுதுகொண்டு அதற்கு மருந்தையும் நாமே போட்டுக்கொள்கின்றோம். தொடரும் இந்த வலி மிகுந்த வேதனைகளை என் ஓவியங்களில் காட்டியுள்ளேன். இன்றைக்கு கையறு நிலையில் இருக்கும் தமிழினத்தின் அவலத்தை இவ்வாறான ஓவியங்கள் மூலம் உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறலாம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது' என்றார் வயதுக்கே உரிய துடிப்புடன்.


போராட்டம் பற்றிய புரிதலை உலக அளவில் கொண்டு சேர்க்கவேண்டிய விடயத்தில் தமிழர்களும் தவறு செய்திருக்கின்றார்கள் என்றுதான் கூறவேண்டும். தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான முழு வலிமையும் ஓவியத்துக்கு இருக்கின்றது என்பதை மறந்துவிட்டார்கள். பொதுவாக எமது மக்கள் ஓவியங்கள் எனும் போது அது அழகாக இருக்கவேண்டுமென்றே நினைக்கின்றார்கள். அதற்குள் புதைந்துள்ள உணர்வுகளை அந்தக் கண்னோட்டத்தில் பார்க்கும்போதுதான் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இத்தகைய வலிமைமிகு ஓவியத்தை அழகாக எமது வாழ்வியலோடு மக்கள் பிரச்சினைகளோடு தொடர்புபடுத்தி வரையும்போது நிச்சயம் அதன் பலனை அனுபவிக்கலாம். ஆகவே அதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமன்றி அதற்குத் தேவையான வளங்களையும் எமது நாட்டிலேயே ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.


நன்றி: இருக்கிறம்

மூடநம்பிக்கையின் முடிச்சுக்கள்


மூடநம்பிக்கையின் முடிச்சுக்கள் எப்போது அவிழ்க்கப்படும்?
“மூடநம்பிக்கைகள் வளரக்காரணம் நமது மனம்தான்"

- முஹம்மட் பிறவ்ஸ்

நாம் மூதாதையர்களின் வாழ்க்கைக் கோலத்தைப் பின்பற்றுகின்றோமோ இல்லையோ… அவர்கள் விட்டுச்சென்ற மூடநம்பிக்கையினை மட்டும் பின்பற்றுகின்றோம். ஒரு காரியத்தை செய்யக்கூடாது என்றால் ஏன் ஏதற்கு என்று யோசிப்பதில்லை. அவர்கள் செய்யவில்லை அதனால் நாமும் செய்யக்கூடாது என்றுதான் நினைக்கின்றோமே தவிர அதன் உள்ளீட்டு விடயங்களை ஆராய்வதில்லை. அதுமட்டுமில்லை அவர் செய்த (மடத்தனமான விடயங்கள் என்றாலும் பரவாயில்லை) விடயங்களை அப்படியே பின்பற்றி ஒழுகுகின்றோம். இது அதிகமாப் பின்பற்றப்படுவது கிராமங்களில்தான். நகருக்குள் வந்த மக்கள் அதன் யதார்த்தங்களைப் புரிந்துகொண்டுள்ளார்கள். மக்கள் இதனைப் பின்பற்றுகின்றார்கள் என்றால் மூதாதயர்களைப் பழிசொல்ல முடியாது. அவர்களது காலத்தில் கல்வியறிவு குறைவு. ஆவர்கள் தங்களுக்குள் ஒரு எல்லையை நிர்ணயித்துக்கொண்டு அதற்குள் வாழ்ந்தார்கள். அதனை நாம்தான் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 

“பூனை குறுக்கே சென்றால் பயணம் சரிவராது, காகம் வெள்ளை நிறத்தில் எச்சில் போனால் அபிவிருத்தி, மாலையில் அரிசி, பருப்புகளை கடன் கொடுக்கக் கூடாது, வியாபாரத்தில் முதலில் நல்ல கையுள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் பண்ணவேண்டும்” இப்படி கோடிக்கணக்கான மூடநம்பிக்கைகள் எம்மிடையே காணப்படுகின்றன. பூனைக்கு அவசரம் என்பதால் அது குறுக்கே செல்கிறது. அதற்கும் நமது பிரயாணத்திற்கும் என்ன சம்பந்தம்? அப்படியென்றால் தற்போது பிரயாணங்களில் ஏற்படுகின்ற அனைத்து விபத்துகளுக்கும் இந்த “அப்பாவி பூனைதான்” காரணமா? எங்கோ இருக்கின்ற பூனையை இங்குள்ள ஒரு சம்பவத்துடன் ஒப்பிடுவைப் பார்க்கையில் சிரிப்புத்தான் வருகின்றது. காக்கையின் எச்சம் தலையில் பட்டால் அபிவிருத்தி இலங்கை ஏன் அபிவிருத்திக்கு இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும். பேசாமல் காக்கைகளை வளர்த்து அதன் எச்சங்களை எம்மீது படவைக்கலாமே… என்ன உலகம் இது. 


அயலவன் ஒருவன் பசித்திருக்க நாம் மட்டும் புசிப்பதற்கு மூதாதையர்கள் மேல் பழியை போட்டு மாலையில் கடன் கொடுக்கக்கூடாது என்கின்றோம். கடனில் இரவுக்கடன், பகல் கடன் என்றெல்லாம் வேறுபாடு இல்லை. வியாபாரம் பெருகவேண்டுமாயின் விற்பனை அதிகரிக்க வேண்டும் வேறொன்றும் இல்லை. 

இதுபோலத்தான் ஜோசியமு;. நம்மில் பலர் ஜோசியத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம். காலை எழுந்தவுடன் இன்றைய நாள் எப்படி நமக்கு அமைகின்றது என்பதைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்தடுத்த வேலைகளைச் செய்கின்றோம். நமது எதிர்காலத்தை அல்லது ஆயுளை ஒருவரால் எதிர்வு கூறமுடியும் என்றால் ஏன் அவரால் நம்நாட்டு நடப்புகளை எதிர்வுகூறமுடியாது போகின்றது. இல்லையில்லை, எதிர்வுகூற முடியும் என்றால் நான் உங்களை ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்துவதற்கு முன்னர் அவற்றை மக்களுக்கு அறிவித்து பாரிய அழிவுகளில் இருந்து மக்களை விடுவித்திருக்கலாமே. உங்கள் எல்லோருக்கும் ஞபாகமிருக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கதான் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்றார். ஆனால், நடந்தது என்ன?

நான் ஜோசியர்களின் தொழிலுக்கு ஆப்புவைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஒருவர் ஜோசியம் சொல்கிறார் என்றால் அவர்களது கையில் ஏதோ ஒரு புராண ஏடு இருக்கும். இது காணாமல் போனால் தொழில் அம்போதான். அப்படி என்றால் நாங்கள் நினைப்பதை சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். ஒருவருடைய மனதை நாம் அறிவது ஒருவகையான கலை. இதை நீங்கள் கூட செய்யலாம். பின்னர் ஒருவருடைய எண்ணங்களை உங்களால் யூகிக்கமுடியுமானால் நீங்களும் ஜோசியர்தான். நாம் ஒருவிடயத்தைப்பற்றி யோசிக்கும்போது நமது மூளை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்னுடன் அதிருகின்றது. இதை நம்மால் உணரமுடியாது. இதை சிறந்ததொரு உதாரணம் மூலம் விளக்கலாம். நம்மில் இருவர் ஒரு விடயத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது குறித்தவொரு செக்கனில் இருவரும் ஒரே விடயத்தைப் பற்றிப் பேச வாயெடுப்போம். ஒருவர் நீ என்ன சொல்ல வந்தாய் என்று கேட்க மற்றவர் பதிலளிக்கும்போது அட நான் கூட இதைத்தான் சொல்ல வந்தேன் என்பார்கள். இருவரும் ஒரு கணத்தில் ஒரே விடயத்தைப் பேச விளைந்துள்ளார்கள். அங்கு நடந்தது என்ன? இருவருடைய மூளையுமே ஒரே அதிர்வெண்ணில் அதிர்ந்துள்ளன. இது ஏனைய ஒருவரின் அதிர்வெண்களுடன் பொருந்தாது. அவ்வாறு பொருந்தினால் நாம் பைத்தியக்காரர்களாகி விடுவோம். ஓவ்வொருவருடைய மூளையும் ஒவ்வொரு அதிர்வெண்களில் அதிருகின்றன. 


ஒரே இடத்தில் ஒரு விடயத்தைப் பற்றிப் பேசும்போது சிலவேளைகளில் மட்டும் இருவருடைய மூளையின் அதிர்வெண்கள் ஒருங்கிசைந்துபோகின்றன. நாம் மனதை ஒரு நிலைப்படுத்தி பலவிதமான உளவியல் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இன்னொருவருடைய மூளையின் அதிர்வெண்னுடன் நமது மூளையின் அதிர்வெண்ணை ஒருங்கிசைக்க முடியும். இதனையே ஜோசியகர் கடைப்பிடிக்கிறார்கள். நாம் தூக்கத்தில் இருந்தவாறு ஜோசியம் கேட்பதில்லைதானே. நாம் ஜோசியரிடம் செல்லும் போது நமது பிரச்சினைகள், அவர் என்ன சொல்ல வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோமோ அவற்றையும் நினைத்துக் கொண்டுதானே செல்கின்றோம். அப்போது நம் மனதில் உள்ளதை அவர் பட…பட…வென சொல்ல நமது உச்சி குளிர்ந்து போகின்றது. வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டுமானால் கடவுளிடம் கேளுங்கள். அல்லது நம்மைப் பற்றி பிறர் ஒருவர் கூறவேண்டுமானால் உங்களைப் பற்றித் தெரிந்த ஒருவரிடம் கேட்டு திருப்தியடைந்து கொள்ளுங்கள். 

ஒருவருடைய மூளையின் அதிர்வெண் இன்னொருவின் மூளையின் அதிர்வெண்ணுடன் ஒருங்கிசைவதால் ஒருவருடைய எண்ணங்களை மற்றவர் புரிந்து கொள்ளலாம் என்பதை நம்புவதற்கு மறுப்பவர்களுக்கு சிறியதொரு சம்பவத்தைக் கூறுகின்றேன். வானொலிகள் எவ்வாறு இயங்குகின்றன என நீங்கள் சிந்தித்ததுண்டா? வானொலிப்பெட்டியை நீங்கள் கழற்றிப் பார்த்தால் தெரியும். வானொலியில் அலைவரிசையை மாற்றும் (வுரநெ) பொத்தான் இறுதியாக ஒரு சதுர வடிவிலான சிறிய பெட்டி ஒன்றுடன் தொடர்புபட்டிருக்கும். அந்தப் பெட்டியை உன்னிப்பாக அவதானித்தால் அவற்றில் மெல்லிய பொலித்தீன் போன்ற ஒரு பொருள் பல பல தட்டுக்களாக அடுக்கப்பட்டிருக்கும். வானொலி அலைவரிசையை மாற்றும் போது அவற்றுக்கிடையிலான தூரம் வேறுபடுவதை நீங்கள் அவதானிக்கலாம்.


வானொலி நிலையங்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அலைவரிசையில் தமது நிகழ்ச்சிகளை ‘ஒலி’ வடிவில் அனுப்புகின்றது. அவை காற்றில் அந்தந்த அலைவரிசைகளுக்கேற்ப அதிர்ந்து செல்கின்றன. இவை மெகாஹேட்ஸ் அளவுகளில் இருப்பதனால் அதை நம்மால் உணரமுடியாது. மனிதனால் குறிப்பிட்ட அளவான அதிர்வெண்ணுடைய அலைகளை மட்டுமே உணர (கேட்க) முடியும். வானொலி நிலையங்களில் அலைவரிசை தொடர்சியாக சென்று கொண்டிருக்கும் போது நாம் வானொலிக்பெட்டியை இயக்கினால் அலைவரிசையை மாற்றும் ஆளியின் திரும்பலுக்கேற்ப அலவரிசை மாறுபடும். இந்த இரு அலைவரிசைகளும் ஒரே அதிர்வெண்ணில் இருக்கும் போது வானொலிப்பெட்டி பாட ஆரம்பிக்கின்றது. அலவரிசையை மாற்றும் உபகரணத்திலுள்ள மெல்லிய இழைகளின் தூரம் மாறுபடும் போது அவற்றின் அலைவரிசை (அதிர்வெண்) களும் மாறுபடுகின்றன. இது உதாரணமாக 94.5 மெகாஹேட்ஸ் எனும் அதிர்வெண்ணுடன் அதிர்ந்தால் அந்த அலைவரிசையில் எந்த வானொலி அப்பிரதேசத்தில் தனது அலைகளை வெளிப்படுத்துகின்றதோ அந்த வானொலி ஒலிபரப்பும் வானொலி நிகழ்ச்சிகளை நம்மால் கேட்கக் கூடியதாகவுள்ளது.

சரி, சம்பவத்துக்கு வருவோம். உங்களுக்குத் தெரியும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. அலைவரிசை குறிப்பிட்ட அளவுக்குள் (89.5-108 மெகாஹேட்ஸ்) வரை மட்டுப்பட்டிருப்பதால் ஒவ்வொரு, இடங்களும் ஒவ்வொரு அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வானொலியின் அலைவரிசைகள் அருகருகே சிறியளவிலான மாற்றங்களுடன் இயங்குகின்றன. அது மட்டுமல்லாது ஆறு, யுஆ, அலைவரிசைகளிலும் வானொலிகள் இயங்குகின்றன. அங்கு மிகக்குறைந்த அலைவரிசைகளில் வானொலி நிலையங்கள் தங்களது ஒலிபரப்புக்களை மேற்கொள்கின்றன. இவ்வாறானதொரு வானொலி குறைந்த அலைவரிசையில் தனது நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிக்கொண்டிருக்கும் சமயத்தில், அந்த ஊரில் உள்ள ஒரு வீட்டில் தேநீர் தயாரிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் நீரைக்கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அது கொதிக்கத் தொடங்கியதும் கொதி நீராவியின் மேலீட்டால் பாத்திரம் மூடப்பட்டுள்ள மூடி அதிரத் தொடங்கியது. அந்த அதிர்வெண் அந்த வானொலி நிலையத்தின் அதிர்வெண்ணுடன் ஒத்துப்போனதால் அந்தப் பானை பாடத்தொடங்கிவிட்டது. நம்மவர்கள் கண்டால் அடடா என்ன அதிசயம் என்று நினைத்து சடங்கே நடத்தியிருப்பார்கள். நமது சுண்டுவிரலை காற்றில் அதே அதிர்வெண்ணுடன் அசைக்க முடியுமென்றால் நமது விரல் கூட பாட ஆரம்பித்துவிடும். இது உயிருள்ள எந்த ஜீவராசிகளாலும் முடியும் என்றால், எங்கு திரும்பினாலும் பாட்டுச்சத்தமாகவே இருந்திருக்கும். கடவுள் எம்மைக் காப்பாற்றி விட்டார். அதற்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். 


மூட நம்பிக்கைகள் வளரக் காரணம் நமது மனம்தான். நம் மனதில் ஒரு விடயத்தை ஆழமாகப் பதிந்துவிட்டால் யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம். அது அந்தளவுக்கு ஊறிப்போய் விட்டதுதான் காரணம். நமக்கு பாட்டி ஒரு பேய் கதை சொன்னால் நாம் இரவில் கூட வெளியேற மாட்டோம். அந்த இரவு பேய் வரும் என்றில்லை. இரவானால் பேய் வரும் என்ற நம்பிக்கை தான் காரணம். இவ்வாறுதான் அதிகமானவர்களுக்கு மனவியாதிகள் ஏற்படுகின்றன. இவற்றைப் பரிகாரிகள் தான் குணமாக்குவார்கள் என்றொரு நம்பிக்கை தொன்றுதொட்டு வருகின்றது. நாம் அவர்களிடம் போனால்தான் அவை குணமும் ஆகின்றது. இதற்கு என்ன காரணம் வேறொன்றுமில்லை, நமது நம்பிக்கைதான் காரணம். நாம் குணமாகும் என்று நம்பிக்கை வைக்கின்றோம். அவை குணமாகின்றது. பிரச்சினை நம் மனதில்தான் இதற்கு பின்வரும் சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டாக அமையும். 

ஒரு பெண்மணி தான் பலகாரம் சாப்பிடடுக் கொண்டிருக்கும்போது அதன் வன்மைத்தன்மை காரணமாக பலகாரம் கடிபடும் போது பல்லும் உடைந்துவிட்டது. உடைந்த பல்லைக் காணவில்லை. வெளியே வந்து வாயில் இருந்ததை உமிழ்ந்து பார்த்தார். அங்கும்காணவில்லை. அப்பெண்மணி வைத்தியர்களைவிட பரிகாரிகளையே அதிகமாக நம்புபவராக இருந்தமையினால் தனது பிரச்சினையை ஒரு பரிகாரியிடம் முன்வைக்கின்றார். அப்பரிகாரி என்ன செய்கின்றார் தெரியுமா? தான் வெற்றிலை பாக்கை மென்று கொண்டிருக்கும்போது தனது வாய்க்குள் ஒரு செயற்கைப் பல்லையும் வைத்துக்கொண்டு அவற்றை “படிக்கம்” என்றழைக்கப்படும் ஒரு பாத்திரத்தினுள் உமிழ்கின்றார். பின்னர், அப்பெண்மணிக்கு ஏதோ மந்திரம் (என்ன பாஷை என்று தெரியவில்லை) ஒன்றை ஓதி ஒரு தண்ணீர் கிளாசைக் கொடுத்து அதில் வாயைக் கொப்பளிக்குமாறு கூறுகின்றார். அப்பெண்மணியும் அதை நம்பி அப்படியே செய்கின்றார். பின்னர், அப்பாத்திரத்தை வெளியே சென்று கழுவி வருமாறு கூறவே, அப்பெண்மணி பாத்திரத்தை கீழே கொட்டும் போது அதில் ஒரு பல் விழுந்து கிடப்பதைக் காண்கின்றார். உடனே, அதைக் கழுவி எடுத்துக்கொண்டு அவரிடம் கொடுக்கின்றார். அப்பெண்மணிக்கு பல்லைக் கண்டதுமே மூன்று நாளாக இருந்துவந்த வயிற்று வலியும் நீங்கிவிட்டது. நோய்க்கு நிவாரணம் கிடைத்தாயிற்று, பிறகென்ன பணத்தைக் கட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.


மேற்படி, சம்பவத்தை நாம் ஆராயும் போது சில விடயங்கள் நாம் உற்று நோக்கினால் அது எந்தளவுக்கு மூடத்தனமானது என்று விளங்கும் பரிகாரி தான் வாய்கொப்பளித்த பாத்திரத்தையே ஏன் கொடுக்கவேண்டும்? அது வெற்றிலை பாக்கு சுவைத்த வாயை கழுவிக் கொப்பளிக்கின்றார். வெறுமையான தண்ணீர் பாத்திரம் என்றால் அதுதான் காட்டிக்கொடுத்துவிடுமே. அதுவும், உடனேயே பரிகாரம் பண்ணாமல் பிரிதொரு தினத்தில் வரச்சொல்லுவது எதற்காக? பெண்ணின் பக்கம் சென்று பார்த்தால் வீட்டிலே எவ்வளவோ வாய்கொப்பளித்தும் பல்லைக் காணாததால் வயிற்றுவலி நிற்கவில்லை. ஆனால் பரிகாரியிடம் சென்றபின் பல்லைக் கண்டவுடனேயே வயிற்றில் இருந்து ஏதோ ஒன்று வெளியேறியது போல பிரமிப்பு, வயிற்று வலியும் குணமாகிவிடுகின்றது. நடந்தது என்ன? அதிசயம் எதுவுமே நிகழவில்லை. பெண்மணி பரிகாரியை நம்பினார். பரிகாரி தனது தந்திரத்தை நம்பினார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் இது ஒரு கட்டுக்கதை என்று நினைத்தவிடாதீர். அந்த பரிகாரியிடம் பணியாற்றிய சிஷ்யன் ஒருவர் பகிரங்க விளக்கக்கூட்டம் ஒன்றில் கூறிய சம்பவமே இது…. நம் மனதை எது ஆளுகின்றதோ அதற்கு நாம் இலகுவாக கட்டுப்பட்டு விடுகின்றோம். இதுதான் யார்த்தமான உண்மை. 

சம்பவம் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் அஸ்லம் பாபாவுக்கு நடந்த சம்பவம் உங்களில் அனேகமானவர்களுக்கு தெரிந்திருக்கும். இறைச்சிக்கடை வைத்திருந்த ஒருவர் பரிகாரியான கதை. ஆங்கில வைத்தியமுறைகளால் தீர்க்கமுடியாமல் போன நோய்களும், கைவிடப்பட்ட நோயாளிகளுக்கும் தன்னால் பரிகாரம் வழங்கமுடியும் எனக் கூறி பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றி வந்தான். நடக்கவே முடியாத நோயாளிகளுக்கு கதிரைகளால் அடித்தான், அவர்கள் வைத்திருந்த தடிகளைப் பிடுங்கி அடித்தான். இதனால், நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்களும் அதனைத் தாங்கிக் கொண்டனர். நோயாளிகளின் வயிற்றில் உள்ள கட்டிகளை எந்தவிதமான கீறல்களும் இல்லாமல் வெளியே எடுத்தான். அவனிடம் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போனார்கள் அவனது புகழ் சர்வதேச மட்டத்தில் கூட சென்றுவிட்டது. இதன் உள்ளக விடயங்களை அறியும் பொருட்டு விஜய் ரிவியின் “குற்றம் நடந்தது என்ன?” எனும் நிகழ்ச்சிக்குப் பொறுப்பானவர்கள் மக்களோடு மக்களாகக் கலந்து அவனது கொடுமைகளையும், தந்திரங்களையும் விடியோ எடுத்து அம்பலமாக்கினார்கள் பின்னர், அவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டான்.


அங்கு நடந்தது இதுதான் காயமில்லாமல் வயிற்றுக்குள் கட்டியை எடுக்கின்றேன். ஏன்று கூறி தனது மடியின் கீழுள்ள இறைச்சித்துண்டுகளை யாருக்கும் தெரியாமல் லாவகமாக வெள்ளைக் கடதாசியினுள் எடுத்துக் கொண்டு, கட்டி எடுக்கவேண்டிய இடத்தில் அதை வைத்துக்கொண்டு கத்தரிக்கோலினால் கடதாசியைக் குடைந்து அந்த இறைச்சித்துண்டை வெளியே எடுத்து இதுதான் உங்களிடம் இருந்த கட்டி என்கிறான். இதை அறியாத அப்பாவிப் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து அவனிடம் வைத்தியம் பார்த்தனர். இக்காட்சி விஜய் ரிவியின் கமராவுக்குள் அகப்படவே அவனது பிழைப்பு நாறிப்போனது.

அண்மைய சூரிய கிரகணத்தின்போது சுனாமி வரும் அல்லது பாரியளவிலான இயற்க்கை அனர்த்தம் வரும் என்று பல ஜோசியர்கள் எதிர்வு கூறினார்கள் குறிப்பாக அனர்த்தம் நிகழும் காலத்தை தெளிவுபடுத்திக் காட்டியிருந்தார்கள். இவர்களை நம்பிய பல அப்பாவிப் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டும் குடியகழ்ந்து சென்றனர். ஈற்றில் நடந்தது என்ன? தேவையில்லாத மனப்பீதிகளை கட்டிவிட்டதுதான் மிச்சம் மனிதன் நினைப்பது எல்லாம் நடந்தால், அதுவும் அந்த காலகட்டத்திலேயே நடந்தால் கடவுள் என்றொருவர் தேவையில்லைத்தானே? நாம் எதிர்பாராதநேரத்தில் எதிர்பாராத சம்பவம் நடப்பதுதான் கடவுள் நம்பிக்கைக்கு அத்திவாரம்.


நான், மனதில் எதை நினைக்கின்றோமோ அதுதான் மூடநம்பிக்கை வளரக் காரணமாகின்றது. உதாரணமாக சிறுவயதில் நமக்குப் பாட்டி பேய்க்கதை சொன்னால் இரவில் வெளியே செல்லமாட்டோம். ஏனென்றால், காண்பதெல்லாம் பேய் போலத்ததன் இருக்கும் நம்மனதில் ஒன்றை நினைத்துவிட்டால் அதை மனதிலிருந்து அழிக்காதவரை அதற்கான பரிகாரத்தை தேடமுடியாது. நமது மனம்தான் நமக்குத் தெரியும், நண்பனும் நமது மனதை நம்மால் ஆளமுடியுமானால் நாம்தான் மேம்பட்ட மனிதர்கள்.

முகப்புத்தகம் - விமர்சனம்

''முகப்புத்தகம்'' - பேஸ்புக்கில் காதல்

- முஹம்மட் பிறவ்ஸ்

தியேட்டருக்குப்போய் படம்பார்த்த காலம்போய் இப்பொழுது முழுக்கமுழுக்க யூடியூப்பயே நம்பி எடுக்கப்பட்ட குறும்படம்தான் "முகப்புத்தகம்'. அட்லியின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்து தற்போதுது யூடியூப்பில் சக்கை போடுகிறது இந்த 20 நிமிடக் குறும்படம்.


விஜய் ரீ.வி.யின் `கலக்கப்போவது யாரு` நிகழ்ச்சியின் வெற்றி நாயகன் சிவகார்த்திகேயன், எம்.சதீஸ், சூர்யா பாலகுமாரன் மற்றும் இவர்களுடன் நான் கடவுள், உத்தம புத்திரன் ஆகிய திரைப்படங்களில் நடித்த ராஜேந்திரனும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். கதை, வசனம்-சூர்யா பாலகுமாரன், பிரியா மதன், இசை-நந்தா, பாடல்-நவீன், கமெரா-ஜோர்ர்ஜ் சி.வில்லியம்ஸ்.

இக்காலத்தில் இளைஞர், யுவதிகள் சதா எந்நேரமும் அரட்டையடித்துக்கொண்டிருக்கும் பேஸ்புக்கின் மறுமுகத்தை புடம்போட்டுக் காட்டுவதே இக்குறும்படம். போலியான பெண்களின் பேஸ்புக் கணக்கினால் ஏமாற்றப்படும் ஆண்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்று பலகோணங்களில் சொல்லியிருக்கிறார் அட்லி இந்த முகப்புத்தகத்தினூடாக.


பேஸ்புக்கில் முகம்தெரியாமல் பழகிய தனது காதலியான புஜ்ஜுவை சந்திக்க தனியாகவரும் முரளிக்கு அவளை(ன)க் கண்டதும் பேரிடி விழுகிறது. கொரியா நாட்டு செல்போனில் பெண் குரலில் பேசி, அவனை ஏமாற்றி அடித்துக் கொன்றுவிட்டு முரளியின் உடமைகளை கொள்ளையடித்துச் செல்கிறான் சதீஸ் எனும் ஏமாற்றுப் பேர்வழி.

"டீக்கடைப் பருவம்... நுனி மீசை உருவம்...' பாடல் சினிமாப் பாடல்போல் ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. நந்தாவின் பின்னணி இசை பாடலில் மட்டுமல்லாது பட இடங்களிலும் பேசியிருக்கிறது. ஜோர்ஜ் சி.வில்லியம்ஸின் கமெரா பல கோணங்களில் மௌன வார்த்தைகளால் பேசியிருக்கின்றது. கூடைப்பந்து விளையாடும்போது "இது புது வோல், கீழே விழுந்தால் மண் ஒட்டிவிடும், அப்பா திட்டுவார்' என்பதெல்லாம் ரொம்ப சின்னப் பிள்ளைத்தனமான ஜோக். மொட்டை மாடியில் வீட்டுக்கார அம்மாவுடன் கடலைபோட்டுக்கொண்டு பாட்டுக்கு "சிக்னல்' கொடுப்பது தேவையே இல்லாத காட்சி. அந்த இடத்தில் காரணமில்லாமல் குட்டையைக் குழப்பியிருக்கிறார் கதாசிரியர்.


ஜீவாவுக்கு (கார்த்திகேயனுக்கு) பேஸ்புக் மூலம் அறிமுகமான ஆர்த்தியுடனான காதல் செல்போன்வரை செல்கின்றது. ஆர்த்தி மின்னஞ்சலில் அனுப்பிய அவளது படத்தைப் பார்க்கவரும் நண்பர்களின் ஆர்வம் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவள் அனுப்பியது ஹொலிவூட் நடிகை "அஞ்சலீனா ஜோலி'யின் புகைப்படம் என்பது தெரிந்ததும் ஜீவாவின் முகத்தில் ஈயாடுவதையும் நண்பர்கள் கிண்டலடிப்பதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளலாம். ஜீவா தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
அதற்காக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு மதுவருந்தி மாறிமாறி தங்களுக்கள் கிண்டலடிப்பது பார்வையாளர்களைக் கடுப்பேற்றுகிறது. இக்காட்சி ரொம்ப ஓவரான அலட்டல்.

அந்நேரத்தில் ஆர்த்தி ஜீவாவை நேரடியா சந்திக்கவரும்படி அழைக்கிறாள். 'ஆண்டவன்' எனும் ராஜேந்திரன் தனது அடியாட்களுடன் ஜீவானின் பாதுகாப்புக்காக அவ்விடத்தில் பதுங்கியிருக்கின்றனர். கண்தெரியாத ஆர்த்தியின் அறிமுகத்தில் நிலைதடுமாறிப் போகிறான் ஜீவா. அந்நேரத்தில் ஆர்த்தி "பேஸ்புக்கில்' தனது காதலை வெளிப்படுத்தியதாகச் சொல்லும்போது, ராஜேந்திரன் பேஸ்புக்கை, பிஸிக்ஸ் புக் என்று நினைத்து அந்தப் பொண்ணுக்கிட்ட வாங்கின "பிஸிக்ஸ் புக்கை' திருப்பிக் கொடுக்கச் சொல்லும்போது, விழுந்து விழுந்துதான் சிரிக்கவேண்டும்.


கண்தெரியாமல் எப்படி 'பேஸ்புக்' பயன்படுத்த முடியும் என்ற எமது கேள்வி ஜீவாவின் கேள்வியாக ஆர்த்தியின் காதில் ஒலிக்க, அடுத்த நிமிடமே ஆர்த்தியிடமிருந்து பதில் வருகிறது. "JAWS" எனும் மென்பொருள் மூலமாக பயன்படுத்துவதென்றும் இதுவரை பேஸ்புக்கில் 834 பார்வையற்ற பயனர்கள் இருக்கிறார்கள்' என்றும் நமக்கு தெரியாத ஒரு பொது விடயத்தை கதைக்குள் புகுத்தியிருக்கும் கதாசிரியரைப் பாராட்டலாம்.

ஜீவா ஆர்த்தியுடன் சேர்ந்தாரா? இல்லையா என்பதே மீதிக்கதை. நண்பர்களுடன் சேர்ந்து முடிவெடுக்கும்@பாது, ஒருவர் 'கோழிக்கும் கண் தெரியணும்; குழம்பும் ருசியா இருக்கணும்' எனும் வசனம் எல்லோரையும் கவருகின்றது. நண்பர்களின் பேச்சைக்கேட்டு முடிவெடுக்கும் ஜீவா, மாற்றமாக ஆர்த்தியுடன் கைகோர்ப்பதில் தனது காதலின் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.


முரளி, ஜீவா மற்றும் கடைசியில்வரும் ஒருவரும் பேஸ்புக்கில் அறிமுகமான தனது காதலிக்கு செல்போனில் அழைப்பை மேற்கொள்ளும்போது எல்லோருக்கும் "முன்பே வா... அன்பே வா...' எனும் ரிங்கிங் டோன் கேட்கும்போது, ஒரே ஆள்தான் பல ஆண்களை ஏமாற்றிப் பிழைக்கிறார் என்பதைச் சொல்லி முடித்திருக்கிறார் அட்லி.

ஆண்டவனாக வரும் ராஜேந்திரன் 'அந்த ஆண்டவன் உங்களை கைவிட்டாலும் இந்த ஆண்டவன் கைவிடமாட்டான்' எனும் வசனம் எல்லோரும் ரசிக்கும் வண்ணமுள்ளது. இலாபத்தை எதிர்பார்க்கமால் பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களை மக்களுக்குச் சொல்லியிருக்கிறது "முகப்புத்தகம்'' எனும் இக்குறும்படம். பேஸ்புக்கில் அவர்கள் அறிமுகமாகும் காட்சியையும் காட்டியிருந்தால் இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கும். ராஜேந்திரன் வில்லனா? காமெடியனா என யோசிக்கத் தூண்டுகிறது. சிவகார்த்திகேயன் இன்னும் முயற்சித்தால் சினிமாவுக்குள் நுழையலாம். இது அதற்கான ஒரு அத்திவாரமாகக்கூட இருக்கலாம். இவ்வாறான சமூக விழிப்புணர்வுக் குறும்படங்களை நாம் இன்னும் இன்னும் எதிர்பார்க்கின்றோம்.


இப்போது இளைஞர்கள், யுவதிகள் அனைவரும் அலுவலகம் தொட்டு பேஸ்புக்கிலேயே தொங்கிக்கொண்டு தங்களது நேரத்தைப் போக்குகின்றனர். அதில் தங்களது சுயவிபரங்களைப் பகிர்வதும் தொலைபேசி மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதும் எவ்வளவு பாரதூரமானது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. அத்துடன் பெண்களின் பெயர்களில் போலியான கணக்குகள் பேஸ்புக்கில் இருப்தையும் "முகப்புத்தகம்'' சுட்டிக்காட்டத்தவறவில்லை.

எது எப்படியிருப்பினும் நம்மைநாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரியாதவர்களிடம் சுயவிபரங்களைப் பகிர்ந்துகொள்வதில் எச்சரிக்கையாக இருப்பது வருமுன் காக்க உதவும்.
முகப்புத்தகம்-பேஸ்புக்கில் புரட்டப்படாத காதல் பக்கங்கள்.


முகப்புத்தகம் குறும்படம் வீடியோ உங்களுக்காக....






நன்றி: இருக்கிறம்

மஹதீரா - விமர்சனம்


பூர்வ ஜென்மத்தைப் புடம்போட்டுக் காட்டும் தெலுங்குத் திரைப்படம் "மஹதீரா''

- முஹம்மட் பிறவ்ஸ்

தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜின் அறிமுகப் படம்தான் "மஹதீரா'. தமிழில் "மாவீரன்'' என்றும் மலையாளத்தில் "தீரா'' என்றும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. பூர்வ ஜென்மத்தில் நிறைவேறாத காதல் 400 வருடங்களின் பின்னர் மறு ஜென்மம் எடுத்து நிறைவேறுகின்றது. இதுவே மஹதீராவின் கதைக்கரு.


ராஜவம்சத்தில் பிறந்த மித்ராவுக்கும் (காஜல் அகவர்வால்) அந்நாட்டின் படைத் தளபதியான பார்த்திபனுக்கும் (ராம்சரண்) இடையே காதல் ஏற்பட, இந்த காதலுக்கு வில்லனாக வருகிறார் காஜல் அகர்வாலின் மாமனா ரணவிரு (தேவ்கில்). இவரது வில்லத்தனத்தால் சிதைந்துபோன காதல் ஜோடிகள் 400 ஆண்டுகள் கழித்து மறுபிறவி எடுக்கிறார்கள். இந்த ஜென்மத்திலயாவது இவர்கள் ஒன்று சேர்வார்களா என்றால், இங்கேயும் வில்லனாக மறுபிறவி எடுக்கும் தேவ்கில் இவர்களது காதலுக்கு முட்டுகட்டையாக இருக்கிறான். இந்த சிக்கலைத் தீர்த்து எப்படிக் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இப்போது ரசிகர்கள் வாயைப் பிளந்துகொண்டு பிரமாண்டத்தையே ரசிப்பதை நன்றாகப் புரிந்துகொண்டு தீனி போட்டிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. கி.பி. 1600இல் மாவீரனாக இருந்த பார்த்திபனுக்கும் 400 வருடங்களின் பின்னருள்ள ஹர்ஷாவுக்கு முடிச்சுப்போட்டுக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். கதாநாயகன் ராம் சரண்தேஜ் (ஹர்ஷா) சீறிப்பாயும் மோட்டார் பைக்மூலம் அறிமுகத்தில் கலக்குகிறார். உயரம் தாண்டும் பந்தயத்தில் தாண்டவேண்டிய 30 அடி உயரத்தை 35 அடியாக உயர்த்தும்போது மோட்டார் சைக்கிளைக் கீழை விட்டுவிட்டு தாவி உயரத்தை தாண்டிவிட்டு தாண்டும் மோட்டார் சைக்கிளில் தாவிப் பிடித்துக்கொள்ளும் காட்சி எம்மை அறியாமலேயே கைதட்ட வைக்கிறது.


பந்தயக்காரியாக வரும் முமைத்கானுடன் சேர்ந்து போடும் குத்தாட்டத்தில் கமெராவும் கிராபிக்ஸும் சேர்ந்து விளையாடியிருக்கிறது. பாடலுக்கான இடங்கள் சூப்பர். எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரியான காட்சியமைப்பை கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும். ராம்சரணின் ஆட்டணிம் அசத்தல். ஆட்டோவில் செல்லுகையில் காஜலின் கையைத் தொடும்போது "ஷாக்'' அடித்து பூர்வ ஜென்மம் நினைவுக்கு வருகிறது. பின்னர் அவளைக் காதலிப்பதாக காஜலிடமே உதவிகேட்டும் போது ராம்சரணை அலையவைக்கும் காட்சியும் கதாநாயகனின் நளினமும் ரசிக்கக்கூடிய வண்ணம் இருக்கின்றது.

மரகதமணியின் பிண்ணனி இசை பல இடங்களில் ரசிகர்களை கட்டிப்போடுகிறது. தீர... தீர... பாடலின் ஹம்பிங் மெய்மறக்க வைக்கிறது. இப்பாடலில் கமெராவின் உச்ச பயனைக் காட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் பாடல் வரிகளை எழுதிய வாலியும் ஜெயராணிம் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். இப்படத்தில் காஜல் அகர்வால் உச்ச அழகோடு காட்டியிருக்கிறார்கள். அவருடைய இளவரசி பாத்திரம் படத்துக்கு உயிரூட்டுகிறது. கலை இயக்குநர் எஸ்.ரவிந்தரின் கைவண்ணத்தில் பிரமாண்டமான செட்கள் போடப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருக்கும் எடிட்டிங் செய்த வெங்கடேஸ்வராக்கும் ஒரு ஓ... போடலாம்.


கால பைரவனின் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள இடம் ஹொலிவூட் உலகையே நம் கண்ணின்னாடி கொண்டு வருகின்றது. பார்ப்பவர்களுக்கே அச்சம் வருமளவுக்கு அந்தரத்தில் அந்த இடம் இருப்பது அதிரசணை. அவ்விடத்தில் 100 பேர்களைக் கொன்று குவிக்கும் வீரத்தின்மூலம் தான் ஒரு மாவீரன் என்பதை நியாயப்படுத்தியிருக்கிறார் கதாநாயகன்.
காஜலை வில்லன் கடத்திச் செல்லும்போது உயரமான கூரையிலிருந்து ஹெலியைத் தாவிப்பிடிப்பது மெய்ச்சிலிர்க்கும் காட்சி.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவு சில இடங்களில் சறுக்கியிருக்கிறது. கையைத் தொடும்போது கதாநாயகனுக்கு மட்டும் ஏன் "ஷாக்'' அடிக்கவேண்டும்? கதாநாயகிக்கு ஏன் பெண்ணின் ஜென்மம் நினைவுக்கு வரவில்லை? இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கொடுக்கவில்லை". காதலனே தனது அப்பாவைக் கொன்றதாக நம்பும் காஜலுக்கு இறுதிவரைக்கும் யார் உண்மையான கொலையாளி என்பதை கதாநாயகன் நிரூபிக்கவே இல்லை". அப்படியானால் கொலைகாரனுடன் அவள் எப்படி ஐக்கியமானாள்...?


புராதனக் கதையில் எதிரிகளின் முஸ்லிம் படைத்தலைவரான "சேர்க்கான்'' பார்த்திபன் செத்து கீழே விழும்பொழுது, "நீ காதலில் ஜெயிக்க மீண்டும் பிறப்பாயடா...'' என்று உரக்கக் கூறுகிறார். முஸ்லிம்கள் மறுபிறப்பை நம்புவதில்லையென்று இந்தக் கதாசியருக்குத் தெரியாதா... என்ன?


ஆகமொத்தத்தில் மறுபிறப்பு உண்டென்றும் சிலை ஆசைகள் அதிலேயே நிறைவேறுகின்றன என்றும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். புராதனக் கதைக்கும் நவீன கதைக்கும் மறுபிறப்பு என்றொரு முடிச்சுப்போட்டு அதை நவீனத்துவத்துடன் பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார் மஹதீராவில்.

தெலுங்கு, மலையாளத் திரைப்படங்கள் மூடநம்பிக்கை, சாஸ்திரம் போன்றில்தான் அதிகமாகத் தொக்கி நிற்கின்றன. விஞ்ஞானத்துக்கே சவால்விடும் இக்கால கட்டத்தில் புராதனக் கதைகளையே திரைப்படமாக்கி எதனைச் சாதிக்க நினைக்கின்றது இத்திரையுலகம்? இதைவிடுத்து சமூகத்தின் மாற்றுக் கருத்துக்களையும் கவனத்திற் கொள்வது நன்று.
மூதாதையர்களின் நம்பிக்கைகளை அடியொற்றிப் பின்பற்றும் மக்களுக்கு நல்லதொரு திரைப்படம்.

இவ்வுலகில் உங்களுக்கு விடிவு கிட்டாவிட்டால் மறுபிறவியிலாவது கிட்டும் என்றும் இப்படத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.


நன்றி: இருக்கிறம்

தெய்வத்திருமகள் - விமர்சனம்


தந்தை-மகள் உறவின் உணர்ச்சிமக்க
பாசப்பிணைப்பு "தெய்வத்திருமகள்"

- முஹம்மட் பிறவ்ஸ்

வளர்ச்சி குன்றிய ஒரு தந்தை 5 வயது மகளை வளர்க்க முடியுமா? என்பது தான் கதைக்கரு. தந்தை-மகள் பாசத்தைப் பிழிந்து தந்திருக்கிறார்கள் தெய்வத் திருமகள் மூலமாக. எழுத்து, இயக்கம்-விஜய், தயாரிப்பு எம்.சிந்தாமணி, ரோனிஸ்க்ரூவாலா, பாடல்கள்-நா.முத்துக்குமார், இசை-ஜீ.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு-நீரவ்ஷா, எடிட்டிங்-அண்டனி.


"I am SAM' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும், கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி வக்கிரங்களை விதைக்கின்ற தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வாறான ஆரோக்கிய சினிமாவின் வரவு தமிழ் ரசிகர்களுக்கு திருப்தியளித்திருக்கிறது. இப்படத்துக்கு "சென்சார் குழு' கூட வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றது.

இப்படத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், (புது முகம்) பேபி சாரா ஆகியோருடன் பல நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.


6 வயது மனநிலையுடன் மனம் குன்றிய நிலையில் இருக்கும் அப்பா வான கிருஷ்ணா (விக்ரம்) தனது 5 வயது மகளான நிலா (பேபி சாரா) மீது அதிகளவான அன்பு வைத்திருக்கிறார். கிருஷ்ணா மனநிலை குன்றியவர் என்பதால் நிலாவை அவரிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கிறார் நிலாவின் தாத்தா. வக்கீலாக வரும் அனுஷ்கா நிலாவை அப்பாவான கிருஷ்ணாவுடன் சேர்க்கப் போராடுகிறார். இருவரும் சேர்ந்தார்களா என்பதுதான் கிளைமாக்ஸ்.

இப்படத்தில் அந்நியனைவிட தன்னை வருத்தி நடித்திருக்கிறார் விக்ரம். நடிப்புக்காக தன்னை வருத்திக்கொள்வதில் விக்ரமுக்கு நிகர் விக்ரமேதான். விக்ரம் வளர்ந்த குழந்தையாகவும் பேபி சாரா வளராத குழந்தையாகவும் இருப்பது படத்துக்கு பிளஸ்.


எதுவுமே தெரியாமல், தனது மகளைத் தேடியலையும் பச்சைக்குழந்தை போன்ற மனமுடைய கிருஷ்ணா, வழக்கறிஞரான அனுராதாவுடன் (அனுஷ்கா) அறிமுகமாகும் காட்சியிலே "நடிப்பு என்றால் இதுதான்'' என்று நிரூபித்திருக்கிறார். நீ யாரென்று விசாரிக்கும்போது ரொம்பவும் சிரமப்பட்டு பெயர், ஊரைச் சொல்லி "நிலா... நிலா... எனக்கு வேணும்' என்று தழுதழுத்த குரலில் கெஞ்சும்போது கூடவே அவரது கை, கால் மட்டுமல்ல சைகைகளும் மழலை பேசுகிறது. சிறுவர்கள் போலவே உடையணிந்து அதைக் கையால் இழுத்துஇழுத்து விடுவதும் யதார்த்தம்.

ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவின் கதையைக்கேட்ட பின்னர், நிலாவை அவருடன் சேர்க்கப்படாதபாடு படுகிறார் அனுராதா. படத்தில் இழையோடும்சோகத்தை தணிக்கவென அனுஷ்காவுடன் இருக்கும் வக்கீல் சந்தானம் நம்மை அலட்டல், "டபுள் மீனிங்' வசனம் இல்லாமல் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார்.


நிலாவின் பாடசாலை அதிகாரியாக வரும் அமலா பால் அது தனது அக்காவின் குழந்தை என்று தெரிந்து காட்டுகின்ற அன்பு எம்மை அசர வைக்கிறது.

விக்ரமுக்கு இணையாக மகள் வேடத்தில் கலக்கியிருக்கிறார் குட்டி சாரா. பார்க்கும் எல்லோரும் தனது சொந்த மகளாக வைத்திருக்க ஆசைப்படும் அளவுக்கு அழகும், நடிப்பும், சுட்டித்தனமும் இருக்கிறது. அப்பாவிடம் ''அம்மா எங்கப்பா..?'' என்று கேட்க, சாமிக்கிட்ட... என்று சொல்கிறார். அப்போது, "ஏன் சாமிக்கு அம்மா இல்லையா...?'' என்று கேட்கும்போது நம் கண்களில் கண்ணீர் ததும்புகிறது. அப்பாவுடன் சைகை மொழியில் பேசும்போது எம்மை அறியாமலேயே மெய்மறந்து அவர்களுடன் ஒன்றிப்போகிறோம்.


விக்ரமின் குரலில் வரும் "கதை சொல்லப் போறன்... ஒரு கதை சொல்லப் போறன்'' பாடல் சிறுவர்களுக்கு நல்லதொரு தீனி. அதில் கிரபிக்ஸையும் கலந்து அசத்தியிருக்கிறார்கள். "விழிகளில் ஒரு வானவில்...'' பாடல் காதில் ரீங்காரமாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் இருக்கின்றது. இவ்விடத்தில் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு புதுமை பேசுகிறது. வரிகளை எழுதிய நா.முத்துக்குமாரையும், இசைவழங்கிய ஜீ.வி. பிரகாஷ்குமாரையும் பாராட்டியே ஆகவேண்டும். வித்தியாசமாக எடிட்டிங்செய்த அண்டனிக்கும் ஓ போட வேண்டும்.

உணர்ச்சிபூர்வமான பல இடங்களில் பின்னணி இசை எம்மை உருகவைக்கிறது. நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசியில் வக்கீல் நாசரின் இறுதியான முடிவுக்காக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் காட்சி உணர்வுள்ளதாக இருக்கிறது. நடிப்பின் யதார்த்தத்தால் அதிகமான ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்த பெருமை தெய்வத்திருமகளையே சாரும்.


குறைகள் என்று பெரிதாக எதுவும் இல்லை. என்றாலும், கதையோட்டத்தில் வேகம் போதாது. முதற்பாதியில் நாடகத்தின் வேகம் தொக்கி நிற்கின்றது. கிருஷ்ணாவின் மனைவி எதைக்கண்டு வீட்டைவிட்டு வந்து திருமணம் செய்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. மகளை கைகழுவிவிட்ட அப்பா, பேரப்பிள்ளையை மட்டும் ஏன் வலுக்கட்டாயமாக அப்பாவிடமிருந்து பிரித்தெடுக்கவேண்டும்? இந்த இடத்தில் கொஞ்சமாக சறுக்குகிறது யதார்த்தம். மின்னலின்போது பயத்தால் அனுஷ்காவை திடீரெனக் கட்டிப்பிடிக்கிறார் விக்ரம். இந்த இடத்தில் ஏன் பாடல்? கட்டிப்பிடித்தால் உடனே பாடல்தானா? தமிழ் சினிமா இன்னும் திருந்தவில்லை.

இரத்த உறவுகளின் பாசம் எந்தளவு உண்மையானது என்பதை சித்தரித்துக் காட்டியிருக்கிறது தெய்வத்திருமகள். நம் நாட்டிலும் உறவுகளைத் தொலைத்த (பிரிந்த) உள்ளங்களின் பாசத்துக்கான போராட்டத்தின் ஒரு துளியையாவது இப்படம் வெளிப்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.



ஆக மொத்தத்தில், தெய்வத்திருமகள் பாசம் + சட்டம் = கண்ணீர்

நன்றி: இருக்கிறம்

புதன், 27 ஜூலை, 2011

நாட்குறிப்பேட்டிலிருந்து...




குழந்தையில் கிறுக்கிய சிலேட்டும்....
குச்சி பிடித்து எழுதிய மணல் மேடும்...
குறும்புகள் பல செய்த கிடுகு வேலியும்...
கிட்டிப்புள் விளையாடிய மூங்கிலும்...
நீங்காத நினைவுகளாக...!

ஓணான் பிடித்த ஈர்க்கிலும்...
குருணலில் ஆக்கிய குஞ்சி சோறும்...
கயிறுகட்டி ஓடிய சிக்குபுக்கு ரயிலும் ...
பொறுக்கித் திண்ட ஆலக்காய்களும்...
நீங்காத நினைவுகளாக...!

கடற்கரையில் மணல் வீடு கட்டியதும்...
சிறுமணலில் நண்டு துரத்திப் பிடித்ததும்...
தும்பி பிடித்து நூலில் கட்டி விட்டதும்...
நீங்காத நினைவுகளாக...!
என்றும் பசுமையோடு - எனது
நாட்குறிப்பேட்டில்....!


நன்றி: சக்தி எப்.எம். (இதயராகம்)

செவ்வாய், 26 ஜூலை, 2011

யோசிக்காதீங்க... சிரிக்க மட்டும்




# மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?என்ன தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

# எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

# தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

# தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

# டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!# யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!

# இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

# பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

தற்கொலை செய்ய சிறந்த வழிகள்








இன்னும் தற்கொலை முயற்சியில் வெற்றி பெற முடியவில்லையா?

இதோ .....மிக சிறந்த வழி..
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
கல்யாணம் பண்ணிக்கோ ....


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites