அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

புதன், 27 ஜூலை, 2011

நாட்குறிப்பேட்டிலிருந்து...




குழந்தையில் கிறுக்கிய சிலேட்டும்....
குச்சி பிடித்து எழுதிய மணல் மேடும்...
குறும்புகள் பல செய்த கிடுகு வேலியும்...
கிட்டிப்புள் விளையாடிய மூங்கிலும்...
நீங்காத நினைவுகளாக...!

ஓணான் பிடித்த ஈர்க்கிலும்...
குருணலில் ஆக்கிய குஞ்சி சோறும்...
கயிறுகட்டி ஓடிய சிக்குபுக்கு ரயிலும் ...
பொறுக்கித் திண்ட ஆலக்காய்களும்...
நீங்காத நினைவுகளாக...!

கடற்கரையில் மணல் வீடு கட்டியதும்...
சிறுமணலில் நண்டு துரத்திப் பிடித்ததும்...
தும்பி பிடித்து நூலில் கட்டி விட்டதும்...
நீங்காத நினைவுகளாக...!
என்றும் பசுமையோடு - எனது
நாட்குறிப்பேட்டில்....!


நன்றி: சக்தி எப்.எம். (இதயராகம்)

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites