அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

செவ்வாய், 26 ஜூலை, 2011

ஆறடிச் சாம்பல்



நாழிகை நாடகங்கள்...
அரங்கேற அனுமதிக்கப்படுகின்றன.
தூரிகையின் வரத்தினால்...
ஆறெட்டுச் சிறகுகளுடன்...
இறக்கைகளின் இடுக்கினுள்..!

ஊண் உறக்கமற்ற உயில் எழுதி...
மச்சம் கொண்ட மயிலிறகுடன்...
பஞ்சு நிரப்பிய மேகங்களாக...
கடைத்தெடுத்த எதிர்பார்புகளுடன்...
காத்திருப்பன்..!

அஞ்சி பத்து சந்திரன்கள்,
அடுக்கி வைத்த அப்பங்களாக...
சாம்பல் பிடித்த அகப்பையில்...
உப்புத் தண்ணி சம்பலுடன்...
நாறிப்போச்சு...

மனித நரம்புகளில் மின்சாரமெடுத்து
வரம்புதனில் வண்டியோட்டி...
ஊறிய முளைகளுடன் உருவில்
நானும் கூழாங்கற்களானேன்.

எட்டிப்பிடித்த ஏணிகளில்
தொட்டில் தொங்கும் தொழுவங்களாக...
சுருக்கிக் கட்டிய கொடியிலிருந்து..
தொப்பென விழும் வௌவால்களாக..
பூசித்துப் போக நியாயமில்லை...

சபித்தாலும், சாபமிட்டாலும்
ஆறடிச் சாம்பலுக்குள்...
பூத்திருப்பன்!
என்றும் காத்திருப்பன்...

- ஏ.ஜ.எம்.பிறவ்ஸ்.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites