அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

செவ்வாய், 26 ஜூலை, 2011

உறங்காத ராத்திரிகள்





சத்தங்கள் மடிசாய்ந்து போகும் நேரத்தில்
வாய்ப்பூட்டு மத்திய மௌனிகளகாவும்
நிம்மதியின் இலக்கணம் தேடிய
ஆணவம் மாய்ந்துபோன மனிதனாகவும்
தலையணையுடன் கட்டில்களில்...

திரையிட்டு மூடி வைத்தாலும்
கட்டணமில்லா கனவுகளும்,
தற்காளிகமாக மரணமும் - என்றும்
சங்கமித்தே போகின்றன.

அம்பலத்தில் பாத்திரமேற்காதவர் கூட
ஒத்திகையின்றி ஒய்யாரமாக...
கனவு நாடக மேடையில்
வேடம் பூண்டு நடிகர்களாகின்றனர்.

தீட்டி வைத்த கற்பனைகளும்
வெறுத்துப் போன வேலைகளும்
இழந்துவிட்ட நிம்மதியும்
வருவாய்கெட்ட கடன்களும்
பெட்டிப் பாம்புகளாக...

குருட்டு இரவுதனில்
அனைவரும் தூக்க மேடைகளில்
இரவுகள் மட்டும் தூங்காமல்
தூக்க மாத்திரைகளோடு.....



நன்றி: தினகரன் வாரமஞ்சரி (செந்தூரம்)

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites