அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

செவ்வாய், 26 ஜூலை, 2011

இயற்கையின் அபிநயம்





மொட்டை மாடிகள் காத்துக் கிடக்கின்றன...
வெட்டைவெளிகள் சிலிர்த்துக் கிடக்கின்றன...
பூக்கம்புகள் துருத்தி நிற்கின்றன...
வயல் வெளிகள் கம்பளம் விரித்து
வரவேற்புக்காக ஏங்கி நிற்கின்றது...

சில் வண்டுகள் அடிக்கடி சிணுங்குகின்றன...
தூக்கணாங் குருவிகள் ஊஞ்சலாடுகின்றன..
ஊசி மழைக் காட்டுக்குள்ளே
ஊர்ப்பட்ட குருவிகள் கீச்சிடுகின்றன...

மென்மையின் முரட்டுத்தனத்தால்
மேகங்கள் முட்டிக் கொள்கின்றன
கூத்தாடிகள் குறுக்கிட்டு
சூடேற்றி பறை சாற்றுகின்றனர்.
குட்டிக் குழந்தைகள் மட்டும் அழுகின்றன.

தொப்பி கழன்ற காளான்களும்
சுளுக் கெடுத்த நண்டுகளும்
வன்முறை செய்யும் ஆமைகளும்
ஆத்தோரம் அம்சமாக இருக்கின்றன.

மலையை வலை போட்ட தேயிலையும்
அணிவகுப்பு மரியாதை செய்யும் இறப்பரும்
கொள்ளை கொள்ளும்
தண்ணீர் சலவைகளும் கொள்ளை அழகு..


(நன்றி: சக்தி எப்.எம். - இதயராகம்)


- ஏ.ஜே.எம். பிறவ்ஸ்

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites