கிறீஸ் மனிதர்கள் என்ற பெயரில் போலி நாடகமாடிய 200 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாகவூம் மர்ம மனிதன் என்ற கூற்றை இனிமேல் மறந்து விடுங்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்ற நடைபெறற் ஊடகவிலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கிறீஸ் மனிதன் நடமாடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளுக்குப் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மக்களிடையே பேசப்பட்டுவரும் கிறீஸ் மனிதன் எனும் வதந்தியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்களும் கொள்ளையர்களும் தாமே பூதம் போன்று வேடமிட்டு மக்களை ஏமாற்றி மிகவும் சாதுரியமாக தமது திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனரே தவிர உண்மையில் நாட்டில் அவ்வாறான கிறீஸ் மனிதர்கள் இல்லையெனவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர கருத்து தெரிவிக்கையில்; கஹவத்தையில் இடம்பெற்ற பெண்கள் கொலையைத் தொடர்ந்தே கிறீஸ் மனிதன் எனும் பெயர் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வரையில் 20 இடங்களில் இவ்வகையான பூதம் உலாவருவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் மக்கள் பீதியடைவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிருந்தபோதும் பொலிஸாருக்கு அது தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் கிடைத்திருக்கவில்லை.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் 200 பேரில் பெரும்பாலானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். இவர்கள் போதை மயக்கத்திலும் அச்சமயம் கொண்டிருந்த மனநிலை மற்றும் காமக்குரோதம் காரணமாகவும் பெண்களை தாங்கள் பயமுறுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கண்டி ஹசலக்கவில் கைதுசெய்யப்பட்டுள்ள ஏழு பேரை மக்கள் தங்களை கண்டு மிரண்டு ஓடுவதை ரசித்ததாகவும் அதனையே பொழுதுபோக்காக செய்து வந்தததாகவும் கூறியுள்ளனர். அலவத்து கொடையில் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை அணிந்து சென்று உலா வந்துள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரிடமிருந்து 25 உள்ளாடைகளை கைப்பற்றியதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். வாழைச்சேனையில் கைது செய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அவரை பிரதேசவாசிகள் இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்று கூறியே பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிக்கவரட்டிய பகுதியில் கறுப்புநிற நீண்ட ஆடை அணிந்து திரிந்த பிச்சைக்காரனைக் கண்டு ஊர்மக்கள் பூதமென பயந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.









0 comments:
கருத்துரையிடுக