கிழக்கில் நடமாடிவந்த கிறீஸ் மனிதன் தற்போது வடக்கிலும் பிரசன்னமாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றான். இதனால் பீதியில் உறைந்துபோயிருக்கம் மக்களில் சிலர் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இன்னும் சிலர் வெளியில் வருவதற்கே அஞ்சுகின்றனர். வவுனியாவில் கிறீஸ் மனிதனின் பீதி கிளம்பியுள்ளதால் தற்போது பொலிஸார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஒரு இடத்தில் இருவருக்குமேல் கூடிநின்று பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர்.
கிறீஸ் மனிதன் என்ற பெயரில் அச்சுறுத்தி வருபவர்களைக் கண்டறிய பொலிஸார் இது சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களையும விநியோகித்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவி்த்தார். வவுனியா மின்சார சபை ஒழுங்கையில் வைத்து இவ்வாறு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஒழுங்கையில் காதல் ஜோடிகள் சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது.









0 comments:
கருத்துரையிடுக